Tuesday, September 11, 2012

வெளிக்கிருப்பவர்-( Dirty-செய்பவர்) வாழ்க்கை அறியாத தகவல்கள்

சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் மலம் அள்ளுபவர்கள்  பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே வயித்தை  பிசையும் எழுத்து. மலம் அள்ளுபவர்கள்  என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

ஆனால் இன்று நாம் மலம் அள்ளுபவர்களைப்பற்றி பார்க்கப்போவதில்லை மாறாக ரயில்வே ட்ராக்கில் வெளிக்கிருப்பவர் ஒருவரை பேட்டி காணப்போகிறோம்




அந்த நபரை ஒரு ஞாயிறன்று வீட்டில் சமையல் செய்ய கழுதைக்கறி வாங்கி விட்டு திரும்பும் வழியில் பார்த்தேன். ஒல்லியான உருவம். கையில் சொம்பு. கைலியை பின்னாடி படாமல் தூக்கிப்பிடித்திருந்தார். மிக மெதுவான  நடை. அவருடன் பேசினால் என்ன என தோன்றியது. சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு, நான் ஹிந்தியிலும் அவர் தமிழிலும் பேச , ஒரு நிமிடம்கூட தாக்கு பிடிக்க முடிய வில்லை. கடுப்பானவர் கைலி நாஸ்தி ஆனாலும் பரவாயில்லை என்று சொல்லி கன்னத்தை சேர்த்து ஒன்று கொடுத்தார்.

”நானே சொம்புல இருந்த தண்ணி கொட்டிப்போச்சுன்னு கழுவாம கூட வந்துட்ருக்கேன் என்கிட்ட வந்து கன்னடத்துல பேசிக்கிட்டு போ அந்தால” என அன்பாக மிரட்டினார்

இது சரிப்படாது என புரிந்து சற்று தூரமாக சென்று அவரை ”போடா வெண்ன” என்று திட்டிவிட்டு மின்னல் வேகத்தில் சைக்கிளை மிதித்து பறந்தேன். ஆனாலும் அவரின் அந்தக்கோலம் என் மனதில் பசுமரத்தாணி போல பதிந்த்தது .

 என்னுடைய மொபைல் கேமராவில் எடுத்தது :)

அவரை எப்படியாவது பேட்டி எடுத்து விட வேண்டும் என்று மாரி அம்மன் கோவிலுக்கு சென்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை தேடத்தொடங்கினேன்.

கடைசியாக இன்று காலை அண்ணா நகர் ரவில்வேகேட் அருகில் உள்ள புதர் மறைவில் உட்கார்ந்திருந்த அவரை கையும் களவு(!)மாக பிடித்து என்னுடைய கேள்விகளை கேட்க்கத்தொடங்கினேன்.

நீங்க எந்த ஊரு? உங்க அண்ணன் தம்பி எல்லாரும் என்ன செய்றாங்க?
அண்ணன் பேரு க்ரிஷ்னா சானட்டோரியம் ரயில்வே ட்ராக்ல உக்காந்துருப்பான். தம்பி பேரு திரிஷா கூவத்தாண்ட ஒக்காந்திருப்பான்

இங்கே அமர கட்டணம் ஏதாவது தர வேண்டுமா?
கட்டணமா அறிவில்லையா நானே பீடி கூட வாங்க வக்கில்லாம முக்கி முக்கி போய்கிட்டுருக்கேன் கட்டணம் தற்றதாஇருந்தா நான் எதுக்கு இங்க வர்ரேன்.

இவர் தான் இன்றைய சாதாரணமானவர் :)


இந்த வேலை செய்வதால் வரும் கஷ்டங்கள் என்ன?
ரயில்வே ட்ராக்குலன்னா ஒன்னும் ப்ரச்சினை இல்ல.வயக்காட்டுல அடிச்சு வெரட்டிவுட்ருவானுக, அப்பாலிக்கா மழை காலத்துல எல்லாம் கொய கொயன்னு ஆகிடும்..... அட மண்ணு எல்லாம் சகதி ஆகிடும்னு சொன்னேன்பா

உங்களை மாதிரி மக்கள் இந்த ஊர் முழுக்க இருக்காங்களா? யார் உங்களுக்கு ஏரியா பிரிச்சு குடுப்பாங்க ?
ஒன்னு உட்டேன் மூஞ்சி கீஞ்சி எல்லாம் ஏரியா ஏரியாவா பிரிஞ்சிடும் .கை சுத்தமாகீதேன்னு பாக்குறேன். எங்க காலியாக்கீதோ அங்க பீடி வலிசுகினே குந்திக்கவேண்டியதுதான்.. அப்பாலிக்கா ஸாப்ட்டா பதில் சொல்றேனேன்னு இது மாதிரி காட்டு மொக்க  கேள்வி எல்லாம் கேட்டீன்னு வச்சிக்க அவ்ளோதான் .

உங்களது பொழுதுபோக்கு?
சரியான இடம் தேடி அலைவதே ஒரு த்ரில்லான அனுபவம் தான். உட்கார்ந்த பின் எதிரில் அமர்ந்திருப்பவர்கள் மீது கல் எறிவது மற்றும் அங்கே சிறு சிறு உருண்டைகளை உருட்டி விளையாடும் வண்டுகள் தான் எனது பொழுதுபோக்கு.

உங்களது இந்த தொழில் மறக்க முடியாத அனுபவம் ?
ஒரு வாட்டி ஹைஸ்கூலாண்ட போகும்போது அரிப்புபொடி போட்டு வச்சிட்டாங்க.டிக்கி டயப்பர் வாயன் டிக்கியவிட மோசமா பழுத்துருச்சு .இதெல்லாம் பழகிடுச்சு. தோட்டத்துல எல்லாம் போகும்போது பாதிலயே எழுப்பி விட்ருவானுக அது கொடுமைலயும் கொடுமை

அப்போது பக்கத்தில் ஒரு பெரியவர் வந்து அமந்தார் என்னை பார்த்ததும்

“தம்பீ கோச்சிக்கிறாதிங்க”   என்றார்

டெமோவின் போது ப்ரபல பதிவர் நான் :)


ஆகா இந்த வசனத்தை எங்கயோ கேட்ருக்கோமே என்று பார்த்தேன் அப்புறம் எவனாவது ப்ரபலபதிவருக்கு தெரிஞ்சவனா இருக்கப்போறான்னு விட்டுட்டேன்.
 கடைசியாக,
 பதிவுல போடனும் ஒரு ஃபோட்டோ எடுத்துக்கட்டுமா ? என கேமராவை வெளியே எடுத்ததும்

ஏண்டா இதெல்லாம் ஃபோட்டோ போடுவியா? அப்படி என்னடா சைட்டு அது ஓடிடு என வன்முறை காலாச்சாரத்தில் இறங்கினார்.

மின்னலென புறப்பட்டு ஒரு குறிப்பிட்ட தூரத்தை அடைந்ததும்
”ஏண்டா இப்படி ஊர நாறடிக்கிறியே உனக்கு வெக்கமா இல்ல?” என்றேன்

அவர் பொறுமையாக சொன்னார் : நீங்க இப்படி செஞ்ஜதே இல்லையா சார் !

சாதாரண மனிதர்கள் பேட்டி தொடறும் ....
                                      
                                                                         காடுவிரும்பல் காகன் ஆண்டர்ஸன்

குறிப்பு : வழக்குபோட நினைப்பவர்கள் முன்னதாகவே தகவல் தரும் பட்சத்தில் முன் ஜாமின் எடுக்க ஏதுவாக இருக்கும்..



17 comments:

  1. இப்படி எல்லாம் உள்குத்து செய்ய கூடாது..ஆனாலும் ரசிக்க வைக்கிறது...

    ReplyDelete
  2. :)) யோவ் அடங்குங்க.

    சாரு நிவேதிதா எழுதிய தேகம் நாவலில் மலம் அள்ளுபவர்கள் பற்றி எழுதியதை வாசித்துள்ளீர்களா? படித்துப் பாருங்கள். வாசிக்கும்போதே வயித்தை பிசையும் எழுத்து. மலம் அள்ளுபவர்கள் என்போர் எத்தனை பரிதாபமான ஜீவன்கள் என்று தெரியும்.

    கொண்டை தெரியுது.

    ReplyDelete
  3. அருமை.....அற்புதம்...!ரசிக்க வைத்த இலக்கிய வரிகள்!

    ReplyDelete
  4. மொக்கையா இருக்கு எனக்கு சிரிப்பே வரலை...
    அப்புற கோவமே வரலை...
    என் லெவலுக்கு நீங்கெல்லாம் ஒர்த் இல்லை...
    எனக்கு வலைக்கலை.... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    ( சூனா பானா சூ*ல சூடு பட்டாலும் விளில தெரியுரா மேரி பெர்ஃபார்மன்ஸ் காட்டாதே...போய்ட்டே இரு...)

    இப்படிக்கு
    மீசையில் மண் ஒட்டாத குஷ்ணா...

    ReplyDelete
  5. //சாதாரண மனிதர்கள் பேட்டி தொடறும் ....//

    அப்ப ஆரம்பம்தானா!!!!!!!!!! ரைட்டூ......

    ReplyDelete
  6. பயங்கரமான உள்குத்தா இருக்கே!

    ReplyDelete
    Replies
    1. no உள்குத்து Its a கும்மாங்குத்து

      Delete
  7. Rofl...... Thanks a lot:)

    ReplyDelete
  8. எல்லாம் சானடோரியம் கோம்ண க்ருஸ்ணா எயிதுனது மாரி இருக்கே..

    சொஸாதா எலக்கிய விருது இதுக்கும் குடுப்பாங்க போலருக்கே..

    :)

    ReplyDelete
  9. ** ( சூனா பானா சூ*ல சூடு பட்டாலும் விளில தெரியுரா மேரி பெர்ஃபார்மன்ஸ் காட்டாதே...போய்ட்டே இரு...)**

    இது வெர்சலாக்கீது மாமு.

    ReplyDelete
  10. இஸ்டாட்டு மீஜிக்...

    ட்னடனக்கா டன்டனக்கா டன்டனக்கா..

    ReplyDelete
  11. பதிவு எழுதியது பிலாசபி பிரபாகரன்

    ReplyDelete
  12. ஆய் போறதுல என்னையா பெட்டி வேண்டிருக்கு..!!!
    ஆனாலும் ரசிக்க வைக்கும் காவியம்.

    ReplyDelete

வந்தவங்க எல்லாரும் கமெண்ட் போடுங்க, இல்லே கனவில வந்து கண்ணை நோண்டிப்புடுவேன்!!

Indli