Thursday, November 7, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்

தீபாவளி மிச்சர்

தீபாவளியன்று நல்லா மூக்குபிடிக்க தெருவெல்லாம் வாங்கி தின்றுவிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் எல்லாம் பாம் வெடிக்கப்போகிறது என கமிஷனர் ஆபீஸில் புரளியைக்கிளப்பிவிட்டு மெரினா கடற்க்கரை, சத்தியம் தியேட்டர் மற்றும் சத்தியபாமா யுனிவர்சிட்டி ஆகிய பகுதிகளில் பாமை வெளியேற்றினேன்.

திருட்டு முழியின் மூலமாக கண்டறிந்து பொதுமக்கள் தர்ம அடி அடித்தனர். அடி முடிந்ததும்

அடிச்சு முடிச்சிட்டிங்க தர்மம் எங்கே?

என உரிமைக்கு குரல் குடுத்தேன். தர்மம் போட்டனர்.

 உடனே நல்ல தொழிலாக இருக்கிறதே என்று அதே வேலையை தொடர்ந்தேன் தூரத்தில் ஒருவன் மரண அடி அடிக்கனும்டா என பாய்ந்தான் கார்பன் டை ஆக்சைடென காற்றில் மறைந்தேன்.


 ***********************************************

இப்போது விமர்சனங்களுக்கிடையே இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் விர்ச்சுவல் பரிசுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் அதாவது விமர்சனம் எழுதும்போதே

தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பார்சேல்...........

புல்லட் பீர் பார்சேல்.....

போன்ற விர்ச்சுவல் பரிசுகள்.....


தீபாவளியை முன்னிட்டு போனஸ் கேட்டு மனைவியிடம் போராட்டத்தில் இறங்கினேன் விர்ச்சுவல் சம்பளம் குடுத்து, விர்ச்சுவல் சாப்பாடு போட்டு செருப்படி மட்டும் ரியாலிட்டியில் கிடைத்தது

*******************************************************

பொட்டு வெடி டப்பா ஒன்றினை நண்பர் ஒருவர் பரிசளித்திருந்தார் வெடிக்க மனைவியிடம் அனுமதி கேட்டேன் தீபாவளியாதளால் அனுமதி கிடைத்தது.

உடனே உரிமைஎடுத்து huggy time என்று கட்டிப்பிடிக்க முயற்ச்சித்தேன் 

மனைவியும் ஆமா ஹக்கிஸ் டைம் போய் குழந்தைக்கு ஹக்கிஸ் மாற்றிவிடு என் கன்னத்தைப்பெயர்த்தார்.

பன்றியும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

வேலை முடிந்ததும் சட்டென பாம்பு மாத்திரைகளை பொருத்தி வைத்து மனைவியை மூச்சுத்திணற வைத்து நழுவினேன்.

************************************************

மும்பை பதிவர் நண்பர் அதுல் குல்கர்னி அவர்களிடம் மனைவி  அடியிலிருந்து தப்பிக்க  ஐடியா கேட்டிருந்தேன் அவர் தனது போலிஸ் நண்பர் உதவியுடன் குண்டு துளைக்காத ஜாக்கெட் பரிசளித்தார். உடனே ஜாக்கெட்டுடன் வீட்டுக்கு வந்து வீராவேசமாக பேசினேன்.

மனைவி மற்றும் மாமியார் கூட்டனி தாக்குதல் நடத்தி அடித்து  அடித்தே ஜாக்கெட்டை கிழித்தனர்.

தரமில்லாத ஜாக்கெட் போல :(.

சாவின் விளிம்பிலிருந்து தப்பித்திருக்கிறேன் .

ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்.
என சபதமிட்டு மும்பைக்கு திருட்டு  ரயிலேரி இருக்கிறேன்.



**************************************************


வாசகர் கடிதம் 


தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

--------------------------------------------------
அன்பின் தமிழ்,


                      உங்களுடைய  " பதிவுசெய்து முற்றிலும் இலவசம் ", "தலத்தில்" ஆகிய சொல்லாடல்கள் மூலம் நீங்கள் என்னுடைய நீண்டநாள் வசாகார் என அறிகிறேன் என்னை நீங்கள் ரோல்மாடலாக கொண்டிருப்பதும் தெரிகிறது. நன்றி.

உங்களுடைய தளத்தை கடந்த ஒரு வார காலமாக ரிப்ரெஷ் செய்து கொண்டிருக்கிறேன், இன்னும் பணம் வரவில்லை.
உங்களுக்கு என் கண்டனங்கள்.

*********************************************

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிய நேர்ந்தது உடனே 1975ல் பெயிலான பத்தாம் வகுப்புத்தேர்வுக்கு மறுதேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையிடம் கொஸ்டின் பேப்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

நீதிமன்றம் வழக்கை
Rehabilitation Centre for Mentally Ill Persons என்னும் அமைப்புக்கு  பார்வார்ட் செய்திருக்கின்றனர் 


ஹ்ம்ம்ம்ம் நீதி கிடைக்கிறதா பார்க்கலாம்

Version 2


தகவலறியும் உரிமை சட்டம் பற்றி நண்பர் நக்கிலக் விளக்கினார். உடனே இந்த ஆண்டு SSLC  தேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவலறியும் உரிமை சட்டம் மூலமாக தேர்வுத்தாள் கேட்டு நண்பர் காடுவிரும்பல் மூலமாக வழக்கு தொடர்ந்தேன் நீதிபதி  மூவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் அதிகாரவர்கத்திற்கு மட்டுமே என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது..


**********************************************
நான்வெஜ் 18+

ஆரம்பம் படத்தில் நயன்தாரா வரும் ஹோட்டல் காட்சியை கண்டுகழித்துக்கொண்டிருந்தேன் அப்போது நயன்


"தம்பி அசஞ்சா சுட்டுடுவேன் "

 என சொன்னதும் முச்சை அடக்கிப்பிடித்து படம் பார்த்தேன் 



பிரியங்களுடன் 

சாம் 

Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


Thursday, October 3, 2013

இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியா.... Altered

ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் (வழக்கம் போல ஓசியில்) பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்... டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தில் உட்கார்ந்திருந்தவர்களை பார்க்கும் பொது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. 



சரி போனால் போகின்றது என்று அமைதியாக இருந்தால் பைபாஸ் பாலங்களை தவிர்த்து கர்நாடக எல்லையில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் (ஏதாவது பிட்டு பட தலைப்பாக இருக்குமோ?)என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கொண்டு இருந்தார்...

நான்  பேருந்தில் கண்டக்டர் உட்காரும் முன் சீட்டில்  உட்கார்ந்து கொண்டேன்..டிரைவர் ஹான்சை வாயில் அடக்கி கொண்டு சாது போல அமைதி காத்த படி பேருந்தை ஓட்டினார்...டிக்கெட் போட்டு ஸ்டெஜ் குளோஸ் செய்து விட்டு மேல் வந்து கண்டக்டர் தனது இருக்கையை கேட்டார். சட்டம்  பேசினேன் அடித்து துவைத்து துரத்தி விட்டனர்.... இருந்தும் பஸ்ஸில் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்டிகள் இருந்ததால் நான் என்ஜீன் சூட்டை சூ****க்கு குடுத்தவாறே அவரிடம் பேச்கிக்குடுக்க ஆரம்பித்தேன் 

அந்த இருவர் 


ஏன் இத்தனை ஸ்டாப்பில் நிறுத்தி செல்லுகின்றீர்கள் என்று கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த அணையில் இருந்து சீறிப்பாயும் நீரை போல அந்த டிரைவரும் கண்டக்டரும் சேர்ந்து என்னை அடி பிரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த டிரைவர் போட்டிருந்த மாவாவை துப்பி அடித்தார்...

ஏன்டா காசு குடுத்து டிக்கெட் எடுதவங்களே பொத்திக்கிட்டு வராங்க  ஓசில  வர்றவன்  உனக்கு என்னடா பெரிய காரணம் சொல்லனும்னு  அடி அடின்னு அடிச்சுட்டாங்க 

நான் சொன்னேன் :நாங்களும் மனுங்கதான் சார்.. வேனும்னேவா டிக்கெட் எடுக்காம வர்றோம் ...?? என்ன செய்ய???  சில பொறம் போக்குங்க படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? சார் டிக்கெட் சார் டிச்கேட்ன்னு  கேட்டு வாங்கிடராணுக.
அவனுக டிக்கெட் எடுக்கரதுனால எங்களுக்கு கெட்டபேர்.....  
ஐ டீ ல வேலை செய்யிரவங்கலாலதான் சான் டிக்கட் காசு அதிகமாயிருக்கு..

MISSION 

சார் நாளும் கிழமைன்னா பராவாயில்லை இல்லை விடுமுறை நாள் என்றால் கூட டிக்கெட் வாங்க சொன்னா எப்படி?

கூட்டம் அலை மோதும் அன்னிக்கு பிரச்சனை இல்லை.. ஆனா சாதாரண நாளில் 
டிக்கெட் எடுன்னு சொன்ன நாங்க என்னசார் செய்யறது..????

தனியார் பஸ் டிக்கெட் வாங்கறாங்கன்னு சொல்றாங்க .. ஏன் இருக்காது... இங்க மெயின்டெயின் செய்யவும் ஸ்பேர் பார்ட்டஸ் மாத்திகொடுக்கவும் நாங்க டிக்கெட் எடுக்கணுமா...? என நியாயமான வாதங்களை முன்வைத்தேன்.


இவ்வளவு பேசியும் அவர்கள் என்னை ஒன்னும் சொல்லவில்லை ஏனென்றால்  நண்பன் வித்தவுட் வீராசாமி அவர்கள் எனக்கு ஆதரவாக பேசியது ஒரு காரணமாக இருக்கலாம்.(அவருக்கு என்ன அன்பு நன்றிகள்)

அவர்கள் பொறுமையாக  இருந்தது எனக்கு பிடித்திருந்தது திடீரென  "இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியான்னு" சொல்லிட்டு இறங்கி ஓடினோம் நானும் நண்பர் வித்தவுட் அவர்களும் ..

ஆனால் துரதிர்ஷ்டம் விரட்டி பிடித்து விட்டனர் 

"20 வருஷம் ஓட்டி சர்விஸ் வச்சி இருக்கும் டிரைவர்கிட்டயாடா மோதுர"ன்னு .... மடிவாலாவிலிருந்து ஜெயநகர் வரை விரட்டி தர்ம அடி அடித்து துவைத்து  எடுத்து விட்டனர் (அவர்களுக்கு என் வணக்கங்கள்)....

நானும் நண்பரும் கதறி அழுதோம் 

அடியேனும் நண்பர் வித்தவுட்டும் பெங்கலூரில் 


பொதுமக்களுக்கு ரயில் எப்படியோ அப்படித்தான் பஸ்சும் .. ஆனா  எங்களை விட திருட்டு ரயில் பயணம்  செய்பவர்களுக்கு , எங்களை விட சிரமம் 
கம்மி.. ஆனா எங்களுக்கும் அவுங்களை விட சிரமம் அதிகம்.

டீ விலை இரண்டு ரூபா வித்த காலத்துல இருந்து நாங்க ஓசியில தான் டீ குடிக்கறோம் ..இன்னைக்கு அப்படியா டீ ஐந்து ரூபாய்க்கு விக்கறான்(அவன் எவ்வளவுக்கு  வித்தா எனக்கென்ன நமக்கு எப்பவுமே ஓசி டீ தான் ) என்று சம்மந்தம் இல்லாமல் பேசியபடியே பயணம் தொடர்ந்தது.... 

கடைசியாக பேருந்து நின்றதும் அதுக்குள்ளே சென்னை வந்துருச்சான்னு கேட்டது தான் மிச்சம் மொத்த பேருந்து நிலையமும் செருப்பால் அடிக்க தொடங்கிவிட்டனர்...... நண்பர் வித்தவுட் உட்பட அப்போ தான் கண்டக்டர்  சொன்னார்.

மறைந்திருந்து பார்க்கும் மர்மத்தின்போது 


"ஏன்டா முக்கா மொட்டையா நான் அங்க இருந்து 
பைபாஸ் பாலங்களை தவிர்த்து சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட  நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கிட்டு இருக்கேன் இங்க வந்து சென்னைனா கேக்குற? என்றார்.....


இப்ப்போ சொல்லுங்க நண்பர்களே நான் செஞ்சது தப்பா????????????

டிஸ்கி: இன்னும் ஒரு வாரம் மெஜஸ்ட்டிக் பேருந்துநிலையம் அருகில் உள்ள சிட்டுகுருவி லாட்ஜ்  அறை எண் 318  வாசலில் தங்கி இருப்பேன் சந்திக்க விருப்பமிருப்பவர்கள் ட்வீட்டவும்.....    

நன்றிகளுடன் 
சாம் 

Monday, September 9, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (09/09/2013) ஆண்டிபட்டி

எவ்வளவு ஆடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு இருந்தா..மனைவியும் , மாமியாரும் வாலை ஆட்டிக்கிட்டுதான் இருப்பாங்க... இவ்வளவு ஏன் சீராட்டி பாராட்டி  வளர்த்த   என் மச்சினிச்சி மரகதம் கூட  நாளைக்கு என்னை செருப்பால் அடித்துவிட்டு நாயின்னு நெனசிட்டேன்னு சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பால்ய கால நினைவுகள் :(


இதை உணர்ந்து உடனடியாக அடுத்த வீட்டுக்காரர்  வீட்டை அவரது மனைவியுடம் ஆக்கிரமிக்க திட்டமிட்டேன். வன்புணர்வு வழக்கில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள் 

******************************************
பக்கத்து வீட்டில் செருப்பு திருடிய வழக்கில் எனக்கு 15 நாட்களுக்கு பின் ஜாமீன் கிடைத்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் மலையாளி  இப்போது எனக்கு ஜாமீன் கிடைத்தாலும்  பேஸ்மென்ட்டில்  மலையாளிகளின் லாபி காரணமாக நியாயம் கிடைக்காமல் போய்  விடுமோ என்று யோசிக்க வைக்கின்றது. எதுவும் நடக்கலாம்..  காரணம்  அவர்கள் ஒற்றுமை அப்படி... (என்னா அடி )
************************************
சென்னை  கவிமணி சாலையில்  அதிகாலை இரண்டு மணிக் சைக்கிள் ரேசில் ஈடுபட்டுகொண்டிருந்தேன் ... வாட்ச்மேன்கள் கண்டித்தும், திரும்பவும் சேசிங், வீலிங் என்று  இறங்கினேன் ...  விரட்டிப்பிடித்து சாணியை வாளி வாளியாக ஊற்றி குளிப்பாட்டி அடித்தனர்  


எனது ரேஸ் சைக்கிள் 

பாஸ்ட் பியுரியஸ் படம் பார்த்துட்டு பைக் ரேஸ் போனா, போதையில இருக்கோம்,... எவன் என்ன செஞ்சிடுவான்னு பார்த்துடலாம்ன்னு நினைச்சா இப்படித்தான்  ஆவும் என பாடம் கற்றுக்கொண்டேன் 

***********************************************************

மிக்சர்

 சென்னை முகப்பேரில்   ஒரு பெண்ணை கிண்டலடித்த என்னை செருப்பால் அடித்து கொடுரமாக கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள் அப்பெண்கள் ... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராணி நல  சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்...

******************************************************

காலையில் வீட்டு கேட்டை திறந்து ,கேட்டுலயே சாவியை அதுலேயே விட்டு விட்டு மறந்துட்டேன்... அரைமணி நேரம் கழிச்சி கதவுக்கிட்ட போறேன்... கேட்டுல பூட்டு சாவி தொங்குது.

ச்சே எவனாவது இங்கிலிஷ் படத்துல திருடறது போலகேட்ல இருக்கற பூட்டு சாவியை இந்த அரைமணி நேரத்துல எடுத்துக்கிட்டு போய் சோப்புல அச்சி போட்டு ,தெரியாம வந்து வச்சிட்டா?

கோத்தாநம்மக்கிட்டயேவாஉடனே சாவியை நான் மொந்து பாத்தேன்...ம்ஹும்  சாணி நாத்தம் அப்போதுதான் சாவி சாக்கடையில் விழுந்தது நியாபகம் வந்தது ... இதுல பெரிய ஷெர்லக் ஹோம்ஸ்ன்னு நினைப்பு மயிறு வேற...

குறிப்பு :  ஷெர்லக் ஹோம்ஸ் - வீட்டில் குழந்தைக்கு வைத்திருக்கு செரலாக்கினை திருடி தின்று மாமியாரிடம் சீவக்கட்டை அடிவாங்குவத்தின் காரணமாக அமைந்த காரணப்பெயர் 

******************************************
கடனுக்கு வேலை செய்யறவனை விடரசிச்சி வேலை செய்யறவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... முந்தா நாள் நைட்டு ஓஎம்ஆர்ல அந்த ஷேர் ஆட்டோவை பார்த்தேன்... ஷேர் ஆட்டோ எண். TN -07-AM 5758- PIAGGIO டைப் ஷேர் ஆட்டோ... ஆட்டோவுக்கு உள்ளே ரெண்டு பக்கமும் புக்ஸ்... பேப்பர்... ஒரு பக்கம் வார இதழ்கள் மறு பக்கம் தினசரி பேப்பர்... அதுமட்டும் அல்ல சின்னதா டிவியில் சிஎன்என் ஐபிஎன் இங்கிலிஷ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு....


 பிட்டுப்படம் தெரியுமா எனக்கேட்டேன் அடித்துவிரட்டினார் த்தா 5 ஓவா மிச்சம்னு மனதைதேத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன் . ஆனாலும் மனதில் ஒரு  இனம்புரியாத குழப்பம்,

அநேகமா அது அடையார்திருவான்மியூர்ஓம்ஆர் ரோட்டுலதான் அந்த ஷேர் ஆட்டோ சுத்திக்கிட்டு இருக்கும்... ஒருவேளை நீங்க யாராவது பார்த்தா அந்த ஷேர் ஆட்டோடிரைவரிடம்  பிட்டு வருமான்னு கேட்டு எனக்கு தகவல் சொல்லவும்.....


மனசத்தம் (Mind voice) : நான் பெற்ற அடியை அனைவரும் பெருக 

********************************************

நள்ளிரவு 15 கொசுக்களை கொன்று விட்டு என்னை நானே சீரியல் கில்லர் என பிரகடனப்படுத்திக்கொண்டென் FBI கைது செய்து Guantamo சிறை  கொரில்லா செல்லில் கொரில்லாவாக பணிஆனை வழங்கியிருக்கின்றனர் (அவர்களுக்கு என் நன்றிகள் )....

என் ஐடி கார்டு புகைப்படம் 


*******************************************

மகளிர் தினம் முதல் மணமாகாத  பெண்களின் எதிர்கால நலனை கருத்தில் என்னுடைய குருநாதர் சேலம் சிவராஜ் ஆணைக்குஇணங்கி ஆங்கில பட விமர்சனங்கள், ஹாட் ஹாட்டர்  ஹாட்டஸ்ட், அடல்ட் கார்னர்  நிறுத்தப்படுள்ளது 




Tuesday, June 18, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (18/06/2013) புரசைவாக்கம்

ஆல்பம்..



எனக்கு ஏன் அனானிகளை பிடிப்பதில்லை? மில்லியன் டாலர் கேள்வியின் விடையாக கிடைத்த தகவல்கள் கீழே

1.அனானிகள் மனித இனத்தை சேற்ந்தவர்களே அல்ல...
2. அனானிகள் யூதர்கள்
3.அனானி ஹிட்லரின் ப்ரதான அல்லக்கை
4.அனானிகளிடம் ரேஷன் கார்டு இருப்பபதில்லை
5.அனானிகள் மீ த பர்ஸ்ட்டு பின்னூட்டம் இடுவதில்லை

இப்போது தெரிகிறதா என்னுடய வெறுப்பிற்க்கான காரணம்


********************************

இலக்கியம்

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள்.ஆனால் நானே ஒரு குரங்காக பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன் .பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும் .

இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் 
என்று என்னுடைய குடும்ப நண்பர் சொன்னார்.

நான் உடனே

 "நமக்கெல்லாம் ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரு தலை காதல் வரும்"


 என்று வினவினேன் தலை வீங்கும் அளவுக்கு கொட்டி வைத்து விட்டார். உடனே தெரு முனைக்கு ஓடி சென்று அவரை கேட்ட வார்த்தையில் திட்டி விட்டு ஓட்டம் பிடித்தேன் போர் குழாயில் விழுந்திருக்கிறேன். நண்பர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு போன் செய்து நேரலைக்கு ஏற்பாடு செய்யவும்.




********************************

கிரிக்கெட் பைத்தியமாகத்தான் இருந்தேன்.... எப்போது சோனி சிக்ஸ் சானலுக்கு சண் டைரக்டில் மாசம் 30 ரூபாய் என்றார்களோ அன்றோடு கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டென் ஆனாலும் சூதாட்டம் அது இதுவென சப்பைக்கட்டு கட்டி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதுவும் ஒரு பிழைப்பு


********************************

மிக்சர்.

 அம்மா கொண்டு வந்த திட்டதில் நான் பாராட்டும் திட்டம் அம்மா உணவகம்தான்...  அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு  சாப்பிட்ட தட்டை அப்படியே அபிட் செய்து வீட்டை நோக்கி விரைந்தேன். மகளிர் சுய உதவிக்குழுவினர் விரட்டி வவந்து வன்முறையை பிரயோகித்தனர்.

உடனே முகபுத்தகத்தில்

" ஏதோ ஏழை பாழை மகளீர் சுயஉதவிகுழுக்கள் வாயை  கட்டி வயித்தை  கட்டி ஏதோ வேலை செஞ்க்கிட்டு இருக்குங்க... அதுங்க அடி மடியில கை வைக்காதிங்கடே... நல்லா இருக்க மாட்டிங்க."

என்னும் நிலைத்தகவலைப்போட்டுவிட்டு லைக்குக்காக காத்திருந்தேன்.
********************************

 அப்படி இப்படி என UPS ஸ்டார் ஜெட்லி இயக்கியகுறும்படம் .... இன்றுடன் 50வதுவாரத்தை கொண்டாடுகின்றது... என்படத்தை விமர்சிக்க சினிமா அறிவு   நிச்சயம் இருக்க வேண்டும் என்று தனது வலைதளத்தில் சொன்னதாக தகவல்...


********************************

இந்த வார விகடனில் விகடன் மேடையில்....

பதிவர் ஜெட்லி ஒரு கேள்விக்கு நச்ன்னு பதில் சொல்லி இருக்கின்றார்...

உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

''முதலில் நன்றாக கதறி அழுவேன். பின்பு முகத்தைத்துடைத்துவிட்டு அம்மா உணவகத்தில்  8 இட்லி, பின்பு தெருவில் சுற்றும் தெரு நாய் மீது கல்வீச்சு நடத்திவிட்டு அதனிடம் கடி வாங்குவேன். பின்பு எதிர் வீட்டு கவிதா அக்காவிடம் அரைமணி நேர அரசியல் விவாதம், பின்பு அலுவலகம் முடிந்து வரும் மனைவியிடம் வழாக்கம் போல விளக்குமாத்தடி,  இரவு சமையல் வேலை அடுத்து பாத்திரம் மற்றும் கக்கூஸ் கழுவுதல். இதெல்லாம்  முடிஞ்சதும் பக்கத்து வீட்டு Wi Fi திருட்டுதனாமா திருடி முகபுத்தகத்தில்''விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டாநான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!''என்று ஸ்டேட்டஸ் போடனும் '(லூசு மோகன் வாய்சில் படிக்கவும்)  புச்சிருக்கு நைனா

********************************

OLDZEE  முதியோர்  பள்ளியில் படித்த போது கடலூர் ஆண்டிநாயர் தெருவில் இருக்கும் கிளை நூலகத்தில்,மல்கோவா ஆண்டி  பத்திரிக்கையை விரும்பி படிப்பதுண்டு... சரோஜாதேவியின் ஒரு பக்க கட்டுரையை தீவிரமாக வாசித்த காலம். நேற்று நான் பார்த்த புதிய பறவை படத்தில்  சரோஜாதேவி வந்து இருந்தார். அப்படியேதான் இருக்கின்றார்...

சேலை அணிந்து...ஆனால் எனக்கு 15 வயதாக இருக்கும்போது போட்டிருந்த அதே மஞ்சள் நிற சேலையையே இன்றும் அதே படத்தில் அணிந்திருந்தார் 
... அதுக்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் சரோஜா மேடம்......


********************************

ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்


கருப்பு கண்ணாடி அணிவதில் ஒரு உபகாரம் இருக்கின்றது. கருப்பு கண்ணாடி அணிந்தவர் எதிரில் இருப்பவரை நன்றாக பார்க்கலாம்... பிடிக்காதவர் என்றால் கவனிக்கவில்லை என்று சொல்லி டபாய்க்கலாம்...ஆனால் கண்ணாடி அணியாதவர்... பார்த்தாரா இல்லையா என்று புரியாமல் விழிப்பார்கள்... அப்படி கருப்பு கண்ணாடி அணிந்த பதிவர் கில்மா குமாருக்கு இரண்டு முறை வணக்கம் வைத்து ஏமாந்து இருக்கின்றேன்....
********************************

நேற்று மவுண்ட் ரோட்டில் நின்றுக்கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் பணமுடையில் தவித்து போனேன்... எதிரில் ஈகோவுக்காக 88 கோடியை செலவு செய்து மருத்தவமனையாக மாறப்போகின்றது புதிய  தலைமைசெயலகம்... துறைமுக மதுரவயல் பறக்கும் சாலை 500 கோடி முழுங்கி 20 சதவிகித பணிகளை மட்டும் முடிந்து  அதே ஈகோ  காரணமாக பாதியில் நிற்க்கின்றது...பல   கோடிகளை கடலில் விழுங்கி விட்டு சேதுசமுத்திரம் முச்சு பேச்சு இல்லாமல் இருக்கின்றது...பணப்பிரச்சனை,கடன்  எல்லாம் சமான்யனுக்குதான்.... அதிகாரவர்கத்துக்கும் அரசுக்கு அது பற்றிய கவலையே இல்லை.

உடனே தலைமைச்செயலகம் சென்று என்னுடைய பங்கு பணத்தை திருப்பத்தரவேண்டும் என மம்மியிடம் கொரிக்கை வைத்தேன், கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்.

இது நியாயமா? வாசகர்கள் காப்பாற்றவும்.

********************************
மெட்ரோ ரயில்  பணிகள் பாதி முடிந்து  விட்டன...மெட்ரோ ரயில் பாலங்கள் நகரத்தில் ராட்சத அனகோண்ட பாம்பு  போல வளைந்து நெளிந்து  செல்கின்றன. உடனே அவற்றைப்பிடித்து கிண்டி பாம்புப்பண்ணையில் விற்க்கலாம் என முயற்ச்சி செய்தேன் பலனளிக்கவில்லை.

*******************************
அன்புடம்

பாதிவார் சாம்

Indli