Showing posts with label spoof. Show all posts
Showing posts with label spoof. Show all posts

Thursday, November 7, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்

தீபாவளி மிச்சர்

தீபாவளியன்று நல்லா மூக்குபிடிக்க தெருவெல்லாம் வாங்கி தின்றுவிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் எல்லாம் பாம் வெடிக்கப்போகிறது என கமிஷனர் ஆபீஸில் புரளியைக்கிளப்பிவிட்டு மெரினா கடற்க்கரை, சத்தியம் தியேட்டர் மற்றும் சத்தியபாமா யுனிவர்சிட்டி ஆகிய பகுதிகளில் பாமை வெளியேற்றினேன்.

திருட்டு முழியின் மூலமாக கண்டறிந்து பொதுமக்கள் தர்ம அடி அடித்தனர். அடி முடிந்ததும்

அடிச்சு முடிச்சிட்டிங்க தர்மம் எங்கே?

என உரிமைக்கு குரல் குடுத்தேன். தர்மம் போட்டனர்.

 உடனே நல்ல தொழிலாக இருக்கிறதே என்று அதே வேலையை தொடர்ந்தேன் தூரத்தில் ஒருவன் மரண அடி அடிக்கனும்டா என பாய்ந்தான் கார்பன் டை ஆக்சைடென காற்றில் மறைந்தேன்.


 ***********************************************

இப்போது விமர்சனங்களுக்கிடையே இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் விர்ச்சுவல் பரிசுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் அதாவது விமர்சனம் எழுதும்போதே

தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பார்சேல்...........

புல்லட் பீர் பார்சேல்.....

போன்ற விர்ச்சுவல் பரிசுகள்.....


தீபாவளியை முன்னிட்டு போனஸ் கேட்டு மனைவியிடம் போராட்டத்தில் இறங்கினேன் விர்ச்சுவல் சம்பளம் குடுத்து, விர்ச்சுவல் சாப்பாடு போட்டு செருப்படி மட்டும் ரியாலிட்டியில் கிடைத்தது

*******************************************************

பொட்டு வெடி டப்பா ஒன்றினை நண்பர் ஒருவர் பரிசளித்திருந்தார் வெடிக்க மனைவியிடம் அனுமதி கேட்டேன் தீபாவளியாதளால் அனுமதி கிடைத்தது.

உடனே உரிமைஎடுத்து huggy time என்று கட்டிப்பிடிக்க முயற்ச்சித்தேன் 

மனைவியும் ஆமா ஹக்கிஸ் டைம் போய் குழந்தைக்கு ஹக்கிஸ் மாற்றிவிடு என் கன்னத்தைப்பெயர்த்தார்.

பன்றியும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

வேலை முடிந்ததும் சட்டென பாம்பு மாத்திரைகளை பொருத்தி வைத்து மனைவியை மூச்சுத்திணற வைத்து நழுவினேன்.

************************************************

மும்பை பதிவர் நண்பர் அதுல் குல்கர்னி அவர்களிடம் மனைவி  அடியிலிருந்து தப்பிக்க  ஐடியா கேட்டிருந்தேன் அவர் தனது போலிஸ் நண்பர் உதவியுடன் குண்டு துளைக்காத ஜாக்கெட் பரிசளித்தார். உடனே ஜாக்கெட்டுடன் வீட்டுக்கு வந்து வீராவேசமாக பேசினேன்.

மனைவி மற்றும் மாமியார் கூட்டனி தாக்குதல் நடத்தி அடித்து  அடித்தே ஜாக்கெட்டை கிழித்தனர்.

தரமில்லாத ஜாக்கெட் போல :(.

சாவின் விளிம்பிலிருந்து தப்பித்திருக்கிறேன் .

ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்.
என சபதமிட்டு மும்பைக்கு திருட்டு  ரயிலேரி இருக்கிறேன்.



**************************************************


வாசகர் கடிதம் 


தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

--------------------------------------------------
அன்பின் தமிழ்,


                      உங்களுடைய  " பதிவுசெய்து முற்றிலும் இலவசம் ", "தலத்தில்" ஆகிய சொல்லாடல்கள் மூலம் நீங்கள் என்னுடைய நீண்டநாள் வசாகார் என அறிகிறேன் என்னை நீங்கள் ரோல்மாடலாக கொண்டிருப்பதும் தெரிகிறது. நன்றி.

உங்களுடைய தளத்தை கடந்த ஒரு வார காலமாக ரிப்ரெஷ் செய்து கொண்டிருக்கிறேன், இன்னும் பணம் வரவில்லை.
உங்களுக்கு என் கண்டனங்கள்.

*********************************************

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிய நேர்ந்தது உடனே 1975ல் பெயிலான பத்தாம் வகுப்புத்தேர்வுக்கு மறுதேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையிடம் கொஸ்டின் பேப்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

நீதிமன்றம் வழக்கை
Rehabilitation Centre for Mentally Ill Persons என்னும் அமைப்புக்கு  பார்வார்ட் செய்திருக்கின்றனர் 


ஹ்ம்ம்ம்ம் நீதி கிடைக்கிறதா பார்க்கலாம்

Version 2


தகவலறியும் உரிமை சட்டம் பற்றி நண்பர் நக்கிலக் விளக்கினார். உடனே இந்த ஆண்டு SSLC  தேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவலறியும் உரிமை சட்டம் மூலமாக தேர்வுத்தாள் கேட்டு நண்பர் காடுவிரும்பல் மூலமாக வழக்கு தொடர்ந்தேன் நீதிபதி  மூவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் அதிகாரவர்கத்திற்கு மட்டுமே என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது..


**********************************************
நான்வெஜ் 18+

ஆரம்பம் படத்தில் நயன்தாரா வரும் ஹோட்டல் காட்சியை கண்டுகழித்துக்கொண்டிருந்தேன் அப்போது நயன்


"தம்பி அசஞ்சா சுட்டுடுவேன் "

 என சொன்னதும் முச்சை அடக்கிப்பிடித்து படம் பார்த்தேன் 



பிரியங்களுடன் 

சாம் 

Monday, September 9, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (09/09/2013) ஆண்டிபட்டி

எவ்வளவு ஆடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு இருந்தா..மனைவியும் , மாமியாரும் வாலை ஆட்டிக்கிட்டுதான் இருப்பாங்க... இவ்வளவு ஏன் சீராட்டி பாராட்டி  வளர்த்த   என் மச்சினிச்சி மரகதம் கூட  நாளைக்கு என்னை செருப்பால் அடித்துவிட்டு நாயின்னு நெனசிட்டேன்னு சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பால்ய கால நினைவுகள் :(


இதை உணர்ந்து உடனடியாக அடுத்த வீட்டுக்காரர்  வீட்டை அவரது மனைவியுடம் ஆக்கிரமிக்க திட்டமிட்டேன். வன்புணர்வு வழக்கில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள் 

******************************************
பக்கத்து வீட்டில் செருப்பு திருடிய வழக்கில் எனக்கு 15 நாட்களுக்கு பின் ஜாமீன் கிடைத்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் மலையாளி  இப்போது எனக்கு ஜாமீன் கிடைத்தாலும்  பேஸ்மென்ட்டில்  மலையாளிகளின் லாபி காரணமாக நியாயம் கிடைக்காமல் போய்  விடுமோ என்று யோசிக்க வைக்கின்றது. எதுவும் நடக்கலாம்..  காரணம்  அவர்கள் ஒற்றுமை அப்படி... (என்னா அடி )
************************************
சென்னை  கவிமணி சாலையில்  அதிகாலை இரண்டு மணிக் சைக்கிள் ரேசில் ஈடுபட்டுகொண்டிருந்தேன் ... வாட்ச்மேன்கள் கண்டித்தும், திரும்பவும் சேசிங், வீலிங் என்று  இறங்கினேன் ...  விரட்டிப்பிடித்து சாணியை வாளி வாளியாக ஊற்றி குளிப்பாட்டி அடித்தனர்  


எனது ரேஸ் சைக்கிள் 

பாஸ்ட் பியுரியஸ் படம் பார்த்துட்டு பைக் ரேஸ் போனா, போதையில இருக்கோம்,... எவன் என்ன செஞ்சிடுவான்னு பார்த்துடலாம்ன்னு நினைச்சா இப்படித்தான்  ஆவும் என பாடம் கற்றுக்கொண்டேன் 

***********************************************************

மிக்சர்

 சென்னை முகப்பேரில்   ஒரு பெண்ணை கிண்டலடித்த என்னை செருப்பால் அடித்து கொடுரமாக கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள் அப்பெண்கள் ... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராணி நல  சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்...

******************************************************

காலையில் வீட்டு கேட்டை திறந்து ,கேட்டுலயே சாவியை அதுலேயே விட்டு விட்டு மறந்துட்டேன்... அரைமணி நேரம் கழிச்சி கதவுக்கிட்ட போறேன்... கேட்டுல பூட்டு சாவி தொங்குது.

ச்சே எவனாவது இங்கிலிஷ் படத்துல திருடறது போலகேட்ல இருக்கற பூட்டு சாவியை இந்த அரைமணி நேரத்துல எடுத்துக்கிட்டு போய் சோப்புல அச்சி போட்டு ,தெரியாம வந்து வச்சிட்டா?

கோத்தாநம்மக்கிட்டயேவாஉடனே சாவியை நான் மொந்து பாத்தேன்...ம்ஹும்  சாணி நாத்தம் அப்போதுதான் சாவி சாக்கடையில் விழுந்தது நியாபகம் வந்தது ... இதுல பெரிய ஷெர்லக் ஹோம்ஸ்ன்னு நினைப்பு மயிறு வேற...

குறிப்பு :  ஷெர்லக் ஹோம்ஸ் - வீட்டில் குழந்தைக்கு வைத்திருக்கு செரலாக்கினை திருடி தின்று மாமியாரிடம் சீவக்கட்டை அடிவாங்குவத்தின் காரணமாக அமைந்த காரணப்பெயர் 

******************************************
கடனுக்கு வேலை செய்யறவனை விடரசிச்சி வேலை செய்யறவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... முந்தா நாள் நைட்டு ஓஎம்ஆர்ல அந்த ஷேர் ஆட்டோவை பார்த்தேன்... ஷேர் ஆட்டோ எண். TN -07-AM 5758- PIAGGIO டைப் ஷேர் ஆட்டோ... ஆட்டோவுக்கு உள்ளே ரெண்டு பக்கமும் புக்ஸ்... பேப்பர்... ஒரு பக்கம் வார இதழ்கள் மறு பக்கம் தினசரி பேப்பர்... அதுமட்டும் அல்ல சின்னதா டிவியில் சிஎன்என் ஐபிஎன் இங்கிலிஷ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு....


 பிட்டுப்படம் தெரியுமா எனக்கேட்டேன் அடித்துவிரட்டினார் த்தா 5 ஓவா மிச்சம்னு மனதைதேத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன் . ஆனாலும் மனதில் ஒரு  இனம்புரியாத குழப்பம்,

அநேகமா அது அடையார்திருவான்மியூர்ஓம்ஆர் ரோட்டுலதான் அந்த ஷேர் ஆட்டோ சுத்திக்கிட்டு இருக்கும்... ஒருவேளை நீங்க யாராவது பார்த்தா அந்த ஷேர் ஆட்டோடிரைவரிடம்  பிட்டு வருமான்னு கேட்டு எனக்கு தகவல் சொல்லவும்.....


மனசத்தம் (Mind voice) : நான் பெற்ற அடியை அனைவரும் பெருக 

********************************************

நள்ளிரவு 15 கொசுக்களை கொன்று விட்டு என்னை நானே சீரியல் கில்லர் என பிரகடனப்படுத்திக்கொண்டென் FBI கைது செய்து Guantamo சிறை  கொரில்லா செல்லில் கொரில்லாவாக பணிஆனை வழங்கியிருக்கின்றனர் (அவர்களுக்கு என் நன்றிகள் )....

என் ஐடி கார்டு புகைப்படம் 


*******************************************

மகளிர் தினம் முதல் மணமாகாத  பெண்களின் எதிர்கால நலனை கருத்தில் என்னுடைய குருநாதர் சேலம் சிவராஜ் ஆணைக்குஇணங்கி ஆங்கில பட விமர்சனங்கள், ஹாட் ஹாட்டர்  ஹாட்டஸ்ட், அடல்ட் கார்னர்  நிறுத்தப்படுள்ளது 




Thursday, September 27, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (27/09/1947) ப்ளூட்டோ




கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…
இந்த செய்தியை கேட்டதும் கூடங்குளத்தை தனி நாடக அறிவிக்கும்படியான கோரிக்கையுடன் ராஜபக்‌ஷேவை சந்திக்க சென்றேன் வெலிகடா
(Welikada ) ஜெயிலில் சாணி அள்ள வைத்திருக்கிறனர்.

*********************************************************************

அதிமுக  ஆட்சிக்கு வந்து    ஒன்றரை வருடங்கள் ஒடி விட்டன…. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்   ஆறு மாதத்தில் மின்வெட்டை போக்குவோம் என்றார்கள். இன்னும்  மின் வெட்டை சரி செய்த பாடில்லை… இதை எந்த ஊடகமும் கேட்க வக்கில்லை…  பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன..  அது கூட பராவாயில்லை.. நேற்று காலை பல் துலக்காமல் சாப்பிட அமர்ந்தேன் மனைவி கண்டுபிடித்து

”ஏண்டா பல் விளக்காமல் சாப்பிட வந்தாய்” என்றார்..



ஊஞ்சல் ஆடும்போது எடுத்தது 


கரண்டு இல்லத்ததால் என்றேன்.

 கரண்டுக்கும் பல்லு விளக்குவதற்க்கும் என்ன சம்மந்தம் என்றார்

 நான் உடனே சைக்கிள் டையனமோவில் பல் போன்ற அமைப்பு நீரின் உதவியால் சுழல்வதனால் மின்சாரம் வரும். அதேபோல்  இன்று மின்சாரம் இல்லாததால் நான் எனது பல்லை நீர் வைத்து சுழற்றவில்லை என்றேன்.

வெளக்காத பல்லுக்கு அறிவியல் விளக்கமா என விளக்கமாற்றால் விளாசி

சங்கிலியில் பிணைத்து வெயிலில் வாழைமரத்தில் கட்டிப்போட்டிருக்கின்றார். நண்பர்கள் வந்து காப்பாற்றவும்.


*********************************************************************



திரும்பவும் பெட்ரோல்  விலை 5 ரூபாய்க்கு ஏற்றப்போவதாக பெட்ரோலியா(மங்கோலியாவில் அண்டை நாடு)  நிறுவனங்கள் கொஞ்சிக்குலாவி அறிவிக்க  இருக்கின்றன… திரும்ப 78 ரூபாய் லெவலுக்கு போவும்ன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வண்டி ஓட்டித்ன் ஆவனும் இல்லைன்னா லாஸ் ஆப் பே தான். என்று ரோட்டில் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.



உடனே நான் பெட்ரோல் விலை ஏறினால் ஆப்பேக்கு (PIAGGIO APE) எப்படி லாஸ் ஆகும்? அது டீஸலில் தானே ஓடுகிறது என என்னுடைய எதிர்ப்பை நியாயமாக பதிவு செய்தேன்.

காதை கடித்து வைத்துவிட்டார்........
இது போன்ற மூடர்களை என்ன செய்வது?


*********************************************************************


கூடங்குள மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக அன்னதான விழாவை இனிதே நடத்தி நம்மை மெய் சிலிர்க்க வைத்து  இருக்கின்றார்... நம் முதல்வர் ஜெ  இந்த விஷயம் அறியக்கிடைத்ததும் உடனடியாக ஸ்ரீரங்கம் சென்று அன்னதானப்பந்தலை வட்டம் சுற்றத்தொடங்கினேன்.

மம்மியின் பாதுகாவலர்கள் பெட்டக்ஸில் எத்தி கால்வாயில் தள்ளினர்.
உடனே அங்கேயே உட்கார்ந்து பிடில் வாசிக்க தொடங்கினேன் முதல்வரின் பாதுகாப்பு கருதி வண்டலூர் பூங்காவில் கூண்டு எண் 19 ல் அடைத்துள்ளனர்




*********************************************************************
ஜெமினி பிளை ஓவர் கிட்ட இருக்கற பார்க் ஓட்டல்  கிட்ட ரைட் கட் பண்ணி சேம வேகத்துல வந்துகிட்டுஇருந்தேன்.. இரண்டு பேர் என்னை துரத்திகிட்டு  டேய் டேய் பண்ணாடன்னு கத்திகிட்டு  வந்தாங்க...  நானும் கடன்காரர்களாக இருக்குமோ என்று வேகமாக கொரங்கு பெடல் போட தொடங்கினேன் .
வாசகர்களுடன் அடியேன் :)))))

                                   
வள்ளுவர் கோட்டத்துகிட்ட வண்டியை நிறுத்தினேன்.. சார் நான் உங்க  வலை ரசிகர்...என்று பெயர் சொன்னார்...

அய்யோ நான் மீன் பிடிப்பதில்லையே என்றேன். பிடித்து பரங்கிமலையின் உச்சியிலிருந்து உருட்டி விட்டனர் 




*********************************************************************
நான்வெஜ் 18+


கிரிக்கெட் ஃபீவர் அடிக்கிறது என்று நண்பர் சொன்னார் உடனே க்ரோஸினுடன் அவரை பார்க்க சென்றேன் அசிங்கமாக திட்டினார் உடனே அவரை பழிவாங்க வேண்டி ஃபேஸ்புக்கிலிருந்து அவரை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டு கிரிக்கெட் என கூகுளில் தேடத்தொடங்கினேன்

”கிரிஜாவில் கிரவுண்டில் ஒரு கிரிக்கெட் மேட்ச்”

என்னும் கதையை படித்துக்கொண்டிருந்தேன் வேலையை விட்டு எடுத்திருக்கின்றனர்.

எனது வாசகர் வண்ணமுத்து



கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கும் போது கூட கிரிக்கெட் பத்தின பதிவுகள் படிக்கக்கூடாதா... என்னா உலகம்டா இது?*********************************************************************

சமீபத்தில் பார்த்த வீடியோ, பதிவுலக பின்னூட்ட சண்டைகளை நினைவுபடுத்தியது

                                         
*********************************************************************
அன்புடன்

சாம் ஆண்டர்ஸன்

Friday, June 1, 2012

ஜரஜம் ஜாடிஜம் ஜெட்லிசேகர்

நான் சிறுவயது முதலே ஓசியுணவு(ஓசி + உணவு) விரும்பி உண்ணும் எனது அத்தை பையனுக்கு திருமணம் என்பதால் மனைவி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எனது டிரை சைக்கிளை “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” பாடலைப்பாடிக்கொண்டே மிதிக்கத்தொடங்கினேன் ஆனால் மதுராந்தகம் வந்ததும் சைக்கிள் செயின் கழன்று சொதப்பியதால். மனைவி நடு ரோட்டில் வைத்து செருப்பை வாயில் கவ்வக்குடுத்து அடித்தார் அதனால் நான் தனியே பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்

கோயம்பேட்டுக்கு சென்றேன் வண்டி பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் ஆக்கீருந்தனை வாசக நண்பர் பார்க்கிங் பால்பாண்டியை அழைத்து மொக்கை போட்டேன் சரி பார்க் பண்ணிக்கோங்க என்றார் சரி என டிரை சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன்



டேய் நான் பால்பாண்டி இல்லடா உனக்கு பரலோகப்பாண்டிடா என கத்திக்கொண்டே விரட்டினார் உடனே அவரை அனானிகள் லிஸ்டில் சேர்த்து ஸ்பேம் செய்து விட்டேன். 





நான் எப்படி ஊருக்கு செல்வேனென்றால் கடலூர் செல்லவேண்டுமெறால் பாண்டி பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்வேன் அப்புரமாக டிக்கெட் கேட்கும்போது 
“அய்யய்யோ தெரியாமா ஏறிட்டேன் அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கறேன் என மாறி மாறி ஊர் போய் செர்ந்து விடுவேன்


பின்பக்கம் ஏறுகையில் கண்டக்டர் சீட் தான் சாய்ஸ்(இதே வாய் சில நாட்களுக்கு முன்பு டிரைவர் பக்கத்துலதான் ஒக்காந்து வருவேன்னு சொல்லுச்சேன்னு நீங்க கேக்கக்கூடாது ஏன்னா அது வேற வாய்) கண்டக்டரிடம் நீங்க இங்க உக்காருவிங்களான்னு கேட்டேன் அவரு ஆமா என்றார் உடனே அதை முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஸீட் கிடைத்தது கடைஸியில் பேருந்தில் என்னையும் சேர்த்து மொத்தமே 5 பேர் தான் 

கடனே எழவே என அந்த சீட்டில் அமர்ந்தேன். பின்பக்கம் ஒரு அழகான இளம் பெண் வந்து உக்கார்ந்தாள். அவளை வழக்கம்போல பார்வையாலே கற்ப்பழிக்கத்தொடங்கினேன்... அவள் வீடியோகேம் ஜாய்ஸ்டிக்கை நோண்டுவது போல மொபைலை நோண்டிக்கொன்டிறுந்தாள்... உடனே நானும் எனது ஜாய்ஸ்டிக்கை நோண்டத்தொடங்கினேன்

பேருந்து கிளம்பியது புதுப்பேருந்து என்பதால் ஆட்டம் இல்லை உடனே நான் என்னுடைய மொபைலில் மெல்லிதாக ஆட்டமா தேரோட்டமா பாடலைப்போட்டு ஆடத்தொடங்கினேன்... கண்டக்டர் மற்றும் கல்லூரி மாண்வி இனைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்



நடனத்தின் போது


கண்டக்டரிடம் 55 ரூபாய் கொடுத்தேன் க்ண்டக்டர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் ஏண்டா இந்த செல்லாத நோட்ட எத்தனவாட்டிடா மாத்த முயற்ச்சி பண்னுவ 93 ரூபா குடுடா என்றார்... ஹி ஹி மறந்துட்டேன் அண்ணே மம்மி டிக்கெட் ஏத்தினத அதான் உங்கட்ட பல்ப் வாங்குனேன் என்றேன்

மொதல்ல டிக்கெட்ட வாங்குடா அப்புரமா மிச்சமெல்லாம் வாங்கலாம் என எட்டி உதைத்தார்..... கீச் ஒலியெழுப்பி அவருக்கு கிலியை ஏற்ப்படுத்தினேன்

திண்டிவனம் திண்டிவனம் என சத்தம் கேட்டது உடனே அங்கிருந்த பெட்டிக்கடைக்காரரிடம் பிஸ்ஸா இருக்கிறதா எனக்கேட்டேன் வாழ்வில் முதல் முறையாக அன்று கக்கூஸ் விளக்குமாற்றால் அடி கிடைத்தது
பின்பு கண்டக்டரிடம்  திண்டி ”வனம்” என்று பொய்யா சொல்கிறாய் எல்லாமே கடையா இருக்கிறது என்றேன் அவரது தோல்பை கிழிய கிழிய அடித்தார் உடனே அண்ணே சும்மா ஜோக்குன்னே ஹி ஹி என்றேன் அடியிலிருந்து விடை கிடைத்தது



அப்போது ஒருவர் என்னிடம் வந்து தம்பி கோவிசிக்குறாதீங்க எனக்கு சர்க்கரை இங்க இருந்து உச்சா பொய்க்க்லாமா என்றார்





அப்படியா எனக்கு சர்க்கரை கம்மி தான் அப்போ நான் கக்.. போய்க்கலாமா என காமெடியை அவிழ்த்து விட்டேன்.. காறித்துப்பினார்

அப்புரம் அவர் தள்ளாடியபடி ஜிப்பை அவிழ்த்துக்கொண்டிருந்தார் 

“நான் வேணா பிடிச்சிக்கவா” என்று திருட்டுப்பார்வை பார்த்தேன்

அவர் “தா...இப்போ ஒருத்தனுக்கு வாய் வெத்தலபாக்கு போடப்போகுது” என்றார்...  அமைதியானேன்

அடுத்து எனக்கும் அவசரமாக வர படிக்கட்டில் நின்று வேலையை ஆரம்பித்தேன் பின்னால் வந்த டாட்டா சுமோ ப்ரைட்டில் வந்தது அது என்னை நோக்கி ஒளிக்கற்றைகளி வீசியதும் ஃபுயூஸ் ஆனது..... றோஃபெல்(ROFL) 

அடுத்து அந்த பெண்ணிடம் மெயில் ஐடி வாங்கி போலி பெயரில் ஆபாச சாட்டிங்கில் இறங்கினேன் வினவு கும்பல் கையில் ஸ்க்ரீன்ஷாட் கிடத்திருக்கிறது விரைவில் பதிவாக வரும் 


ஜெட்லி சேகர்




Thursday, April 19, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (18/04/1947) புதன்


ஆல்பம்.
தமிழக அரசு தமிழ்ப்பதிவர்களுக்கு  விருதுகளை அறிவித்து இருக்கின்றது...ஔவையார் விருதைப் பெற்று இருப்பவர் யார் தெரியுமா?
ஔவை பிராட்டி போல அனுதினமும் தமிழ்த் தொண்டு செய்யும் திரு.ஜெட்லிசேகருக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..இனி தமிழ் மெல்ல வாழும்... வாழ்த்துகள்.. ஔவையார் விருது பெற்ற திரு ஜெட்லி சேகருக்கு.






==============================


பெப்சி சங்கத்தை உடைத்தே தீருவோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள்.. நானும் வெயில் காலத்தில் பெப்சி சங்கத்தை உடைப்பது நியாயமல்ல என உதயகுமார் தலைமையில் கடும் போராட்டத்தில் இறங்கினேன். உடனே என்னையும் தலைவர் உதயகுமாரையும் இரண்டு நாள் கட்டி வைத்து அடித்தனர் .. இப்போது ஸ்டிரைக் வாபஸ் பெற்றுவிட்டார்கள்..பார்ப்போம் பொறுத்து இருந்து பார்ப்போம். என்ன நடக்கின்றது என்று..கூறிக்கொண்டே வடை பெற்றோம்....சாரி விடை பெற்றோம்.


பின்பு அது சரியான விடையா என ஒரு டீச்சரிடம் கேட்டேன். டிக்கி பிளக்க பிளக்க பிரம்பால் அடித்து துரத்தினர்..




=====================================


பதிவர் விந்தை மனிதன் கூஜாராம் திருமணத்துக்கு என்னால் போக முடியவில்லை.. சரியாக  அதே நாளில் எனது அந்தை பையன் (விந்தை,அந்தை) ஆந்தை திருமண நிச்சயதார்த்தம் கடலூரில் நடந்த காரணத்தால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தில் காளான் பிரியாணி போட்டோம் நீதான் மிஸ் பண்ணி விட்டே என்று என்னை வெறுப்பேத்த கூஜாராம்  கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு இருக்கின்றதே... அவை கொடுமையான கணங்கள்.





==========================================


மிக்சர்
ஐபிஎல் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கி விட்டது.. பத்தாவது படிக்கும் பசங்களின் பெற்றோர்கள் வெறுத்து போய் இருக்கின்றார்கள்.. பத்தாவது படிக்கும் ஆம்பளை பசங்க இஞ்சி தின்ன குரங்கு(ஜெட்லி சேகர்) கணக்கா முகத்தை வச்சிகிட்டு புத்தகத்தை வச்சிகிட்டு படிக்கறது போல நடிக்கறானுங்க. இந்த விஷயத்தை என்னுடைய பக்கத்து வீட்டுப் பத்தாவது மாணவன் பட்பனாதன் அம்மாவிடம் போட்டு கொடுத்தேன்.. அன்றைய பொழுது சந்தோசமாக சென்றது.

==========================================


ஏண்டா சும்மாவே வீட்டுல இருக்க எதுனாச்சும் வேலைக்கு போலாம்ல என்று மாமியார் காலையில் விளக்குமாற்றால் அடித்து வீட்டைவிட்டு விரட்டினார் .
மெட்ரோரயில் பணிகள் காரணமாக சென்னை அசோக்பில்லரில் இருந்து கோயம்பேடு செல்வதற்குள் போதும் போது என்றாகிவிடுகின்றது...என்னைக்குத்தான் இந்த மெட்ரோரயில்பணிகள் முடியும் என்று ஏக்கமாகவும் கடுப்பாகவும்  இருக்கின்றது என்று வீட்டு வாசலில் நின்று மாமியாரிடம் கூறினேன்.. மறுபடியும் என்னை அடித்து துவைத்தார்.


மிருகவதை சட்டத்தில் அவரை சிறையில் அடைதிருக்கின்றனர் (முதல்வர் மம்மிக்கு எனது வாழ்த்துக்கள்)
==============================
சாம் தி டேக்கர்

Thursday, March 29, 2012

வக்கிர குணங் கொண்ட பெண் பதிவரால் வாட்டமுறும் ஊழியர்கள்!


இன்று நாம் இந்த உண்மைச்(!!!!) சம்பவத்தினூடாகப் பார்க்கப் போகும் பெண் பதிவர் கொஞ்சம் வித்தியாசமானவர். ஒரு வகையில் பிரபல அல்லது ப்ராப்ள பெண் பதிவர் என்றே சொல்லலாம். வீடு சுத்தமாக இருந்தால் நாடும் சுத்தமாகும் நாடு சுத்தமானால் வீடு சுத்தமாகுமா? என்னும் தத்துவத்தை தனது பிலாக்கில் கொண்டு நடப்பவர்.


நிஜத்தில் கொடூரமான வக்கிர குணம் கொண்டவராக விளங்குபவரும் தான் இந்தப் பெண் பதிவர். இவருடைய வலைப் பதிவில் என்னுடைய பின்னூட்டம் ஒன்றினைப் பார்த்த வாசகர் ஒருவர், என்னிடம் இந்த குறிப்பிட்ட ப்ராணியினை சீ....குறிப்பிட்ட பிராணியின் பெயர் கொண்ட பதிவரைத் தெரியுமா என்று கேட்டார். நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனாலும் போகப்போக நெறுங்கி பழக ஆசை அதனால் தான் வலைப்பூ வழியே கருத்து போடுகிறேன் என்று சொன்னேன்.

உடனே அந்த வாசகர்  சில பதிவர்கள் பதிவுகளை தான் காப்பி அடிப்பர் ஆனால் இந்த பெண் பதிவர் பின்னூட்டங்களை கூட காப்பி அடிப்பவர் என்னும் குண்டை தூக்கிப்போட்டார் அது ஆற்றிலறியாக என்னுடய நடுமண்டயில் இறங்கியது. உடனே அதிர்ச்சியை மறைத்து விட்டு மேலும் விவரங்களை சேகரிக்க தொடங்கினேன்


ஆதாரம் இல்லாது ஒருவர் மீது எப்படி நண்பா குற்றம் சுமத்துவது என்று கேட்டேன். நண்பர் சொன்னார். உங்களுக்கு வேண்டிய ஆதாரங்களை அங்கே செல்லும் வாடிக்கையாளன் நானே ஒளிப்பதிவு செய்து தருகிறேன் என்றார். உடனே நானும் என்னுடைய நோக்கியா 1100 மொபைலை அவரிடம் கொடுத்து இதில் பதிவு செய்து தாருங்கள் என்றேன். மொபைலுடன் சேர்த்து என்னயும் குப்பை கூடையில் தூக்கி போட்டு விட்டார்



பதிவர் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள் : பாரத தலைநகர் (டில்லி என்னும் பெயரை குறிப்பால் உணர்த்த இவ்வாறு சொல்லப்படுகிறது) பகுதியிலுள்ள CSNL தொலைத் தொடர்பு அலுவலகம். எட்டு ஊழியர்களை மாத்திரம் உள்ளடக்கியது. அன்றைய தினம் வக்கிர குணங் கொண்ட அம்மணி அலுவலகத்திற்கு வரவில்லையே என்று எல்லோர் உள்ளமும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்திருந்த வேளையில், என்னுடைய உளவாளி வாசகர் உள்ளே சென்றார்
அப்போது.......
அம்மணி தன் கண்ணாடிக்குள்ளால் கோரப் பார்வை பார்த்தவாறு கொஞ்சம் தாமதமாக அலுவலகத்தினுள் நுழைந்தார்.
உளவாளி GUD MOANING MADAM என்றார்...
திமிர் பார்வை நுழைந்ததும் தான் தாமதம், முன் வாசலுக்கு அண்மையில் இருந்த பெண்ணிடம் "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகத்த்தா" என்று ஏசத் தொடங்கினார். 

உடனே அந்த வாசலுக்கு அருகில் இருந்த பெண்மனியும் "ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகுதாத்தா" என்றார்
அம்மணி : ரக
பெண்மணி : ரகு
அம்மணி : ரக
பெண்மணி : ரகு
அம்மணி : ரக ரக
பெண்மணி : ரகு ரகு.......... இவ்வாறு அந்த பெண்மணியை கலாய்த்தார்


அம்மணி பற்றி முழுமையாக அறியாதோர் மாயாண்டி குடும்பத்தார் படத்தில் வரும் மாயாண்டியை மனதில் கற்பனை பண்ணிக் கொள்ளுங்கள்.
எம்மிடம் குறித்த நபர் ஒளிப்பதிவு செய்த வீடியோவில் பதிவுகளில் எழுதுவது போன்றே வக்கிர அம்மணியார் அசிங்கமாக, ஆபாசமாக ஒரு கேள்வி கேட்டார்.
அதற்கு நாம் சரியான விடை சொல்ல வேண்டும்

"ஏம்பா தண்டாயுதபாணி, நைட்டு - - - - விட்டு ஆட்டி விட்டு வந்தியா?அதான் நீ ரொம்ப டயர்டா?  

அ) தயிர் கடையும் மத்து ஆ)குழம்புக்குள்ள கரண்டி இ)தொட்டில்க்குள்ள குழந்தை

தண்டபாணியும் விடை தெரியாமல் விழித்திருக்கிறார்..
இதில் மகா கொடுமை என்னவென்றால் எல்லோருக்கும் தம் வேலை போய் விடுமே என்ற காரணத்தினால் இந்த வக்கிர அம்மணியின் மொக்கைகளை சகித்துக் கொள்ள வேண்டிய நிலமையில் ஒத்துழைக்க வேண்டியதாகின்றது.
அம்மணியை விட வயசான ஆண்களைக் கூட வக்கிர அம்மணியார் கொல வெறியோடு ஏசுவது தான் மிகக் கொடூரம்.
கடந்த குடியரசு தினத்தன்று ஒரு முதியவரிடம் பாரத் மாதா கீ ஜேஎன்று கூறி இருக்கிறார்
குறிப்பு : மாதா என்றால் அம்மா என பொருள் (போதுமா வக்கிரத்திற்கு உதாரணம்)


ப் பதிவின் சாராம்சம்:
அம்மணியைப் பற்றிய செல்போனில் எடுக்கப்பட்ட அசிங்கமான பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் என்னிடம் குறித்த அந்த நண்பரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" எனும் சொல்லாடலுக்கு அமைவாக மணி 2012ம் ஆண்டு போகிப்பண்டிகை அன்று அதை தீயிட்டு கொளுத்திவிட்டேன்.

Monday, February 27, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (27/02/1947) செவ்வாய்

ஆல்பம்.
கடந்த இரண்டு நாட்களாகப் பெண்களூரில் வாசம்.. கடந்த வெள்ளிக்கிழமை திடீர் என்று  பெங்களுர் போய் வரலாம் என்று முடிவு எடுத்து உடனே குடும்பத்தோடு கிளம்பி விட்டோம்.
முன்னை விட குளிர் போகும் போதே வாட்டி எடுக்கின்றது.. கிருஷ்ணகிரி டூ ஓசூர் சாலைகள்  விரிவுபடுத்தப்படுவதால் மலைகளைக் குடைந்து கொண்டு இருக்கின்றார்கள்.. அவர்களிடம் சென்று உகாண்டாவுக்கு வழி கேட்டேன்.. உளியால் உச்சி மண்டையைக் கொத்தி விட்டனர். 


காஞ்சிபுரத்தில்  இருந்து பூந்தமல்லி வரை ரோடு கச்சடாவாக இருக்கின்றது.. ஆனால் டோல் மட்டும் வக்கனையாக வாங்குகின்றார்கள்..
நானும் டோல் கட்ட சென்றேன்.. தள்ளுவண்டிக்கெல்லாம் எதுக்குடா தொழு என்று துரத்தி விட்டனர்.  கனரக வாகனங்கள் இடது புறம் செல்லவேண்டும் என்று எத்தனை இடத்தில் எழுதி வைத்தாலும் எந்த லாரி டிரைவரும்  மதிப்பதாகத் தெரியவில்லை..உடனே நான் என்னுடைய தள்ளுவண்டியை எடுத்துக்கொண்டு இடது புறமாகச் சென்றேன்.  ஆனால் ஒரு சில லாரி டிரைவர்கள்.. மிகச்சரியாக ஓட்டிவந்து என்னை டிக்கியில் இடித்து சாக்கடையில் உருட்டி விட்டனர்.
=================================================
12 மணிக்கு ஆரம்பித்த போலிஸ் என்கவுண்டர் பரபரப்பு விடியல் மூன்று வரை தொடர்ந்தது என்று என்கவுண்டர் நடந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டு நண்பர்  தெரிவித்தார்.. நாலுமணிநேரம் பக்கு பக்குன்னு வீட்டுக்குள்ளேயே உயிரைக் கையில புடிச்சிகிட்டு விளக்கு எல்லாத்தையும் அனைச்சிட்டு உட்காந்துகிட்டு இருந்தோம் என்றார்.. நல்ல வேள உசுர கீழ உட்ருந்தா அவ்ளோதான் என்று டைமிங் காமடி அடித்தேன்.. நண்பரின் மனைவி கண்ணில் மிளக்காயப்பொடியை தூவி அடித்தார். 
=================================================
என்கவுண்டர் நடந்த போது வாசக நண்பர் ஒருவரின் அழைப்பு வந்ததும் பேச பால்கனி பக்கம் வந்தேன். அப்போது என்னைப் பார்த்து ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டர்.. ஒரு தர சொன்னா அறிவு வேணாம் ..த்தா  உள்ளே போய்ப் பேசுடா.. என்று கடிந்து கொண்டு இருக்கின்றார்.. உடனே உள்ளே ஓடிவிட்டேன். பின்பு என்கவுண்டர் முடிந்ததும் கூட்டத்தில் அனானியாக நின்று கொண்டு "ஜெய் ஜெட்லி" என்று கத்தினேன். திரிபாதி என்னையும் என்கவுண்டரில் போட உத்தரவிட்டுள்ளார். 
==========================================
இன்றில் இருந்து இரண்டு மணிநேரம் சென்னையில் மின்வெட்டு அமுலுக்கு வருகின்றது.. அதனால் நான் அமுல்டப்பா வாங்குவதை நிறுத்திவிட்டேன். எப்படி என்னுடைய அறிவு? வாசக நண்பர்கள் இதே நடைமுறையை பின்பற்றவும்.. 
==================================
நேற்று இரவு பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டு இருந்தேன்.. கிருஷ்ணகிரி அருகே இருக்கும் மலையில் காட்டுத்தீ ஜெக ஜோதியாக எரிந்து கொண்டு இருந்தது.. வேலூர் அருகே வந்தால் அங்கேயும் மலையில் அதே  தீ எரிந்து கொண்டு இருந்தது.. எப்படி ஒரே நேரத்தில் இரண்டு பக்கமும் ஒரே தீ எரியும் எனக் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டேன்.. யாரோ விஷமிகள் வைத்த தீ என்பது நன்றாகத் தெரிகின்றது.. உடனே கொஞ்சம் விஷ முறிவு மருந்தினை வாங்கி தீயில் ஊத்தினேன். ஹ்ம்ம்மம்ம்ம்ம் அனைகிறதா பார்க்கலாம் ..
==================================
இந்தவாரக் கடிதம்.
அன்பு சாம் ,
எப்படி இருக்கீங்க ? குட்டி பாப்பா நலமா? நாங்க இங்கு நலம். என் பெயர் ஜெட்லி முத்து குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை மிட்னைட்மசாலா  - இல் சொல்லியதைப் பின்னூட்டமிட்டிருந்தேன்.
நியாபகம் வரும் என்று நினைக்கிறேன்சரவணபவன் வாசலில் பொட்டி ட்டும் வேலை.
நான் உங்களுடய தீவிர வாசகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்காமல் கக்கூஸ் கூட சென்றதில்லை. தினம் 2,3 தடவை (வயிறு சரி இல்லப்பா) உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு பைத்தியம் முத்திப் போய் இருக்கிறது (உங்களை மாதிரியே). உங்களுடைய மான்வெஜ் நான்வெஜ், குத்துப் பரோட்டா மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டிருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் அனானியாகத் தெலுங்கில் இடத்தான் விருப்பம். அதனால் தான் நிறைய இட முடியவில்லை...

நண்பர் ஜெட்லி முத்து குமாரின் திருமண ஆல்பம்
உங்களைப் பார்த்து நானும் எழுத வேண்டும் என்று (தேவை இல்லாத) ஆசை. ஜன ரஞ்சகமாக நிறைய படித்திருக்கிறேன். குஷ்பூ , தம்மன்னா ,சிலுக்கு, லக்ஷ்மிராய், தேஜாஸ்ரீ என்று பலர் பிடிக்கும். தீவிர இலக்கியத்தில் ஆர்வமில்லை. கடந்த வாரம் கென்யா  போய் வந்தேன். அந்த அனுபவத்தை ஒரு பதிவாக்கி என் பதிவுலக வாழ்கையை ஆரம்பிக்கிறேன். என் தள முகவரி
உங்களுடைய உண்மையான விமர்சனம் எனக்குத் தேவை.
உங்களுக்கு நான் நான்கு ஆப்சன் குடுக்கிறேன்
1 ) நீயெல்லாம் எழுதணுமா?
2 ) தம்பி உனக்கு முடி இன்னும் வளரனும்
3 ) பரவாயில்லை இன்னும் நன்றாக எலுத முயலுங்கள் 
4 ) நல்லா இருக்கு
நான் தள வடிவமைப்பிலும் தேர்ச்சி பெற்றவனல்ல. எதாவது மாற்ற வேண்டியிருந்தால் சொல்லவும். DUBAAKKOOR  வோட்  பட்டன்  போட்டு விட்டேன் ஆனால் எப்படி என் தளத்தை லிங்க் என்று தெரியவில்லை. எனக்கு சொல்லவும்நிறைய எழுதவும். எனக்கு ஒரு தரவு போடுவதுக்குள் தாவு தீந்து போய்விடுகிறது.  நீங்கள் எப்படித்தான் அடிக்கடி போடுகிறீங்களோஉங்கள் மெயிலை ஆவலுடன் எதிர் பார்க்கும். படித்து விட்டு தவறாமல் ஒட்டு போடவும்..
ஜெட்லி முத்து குமார்
எனது பதில்:
ஆன்பின்(அன்பின் என்று வாசிக்கவும்)  ஜெட்லி முத்துக்குமார்..ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லி அடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. எனக்கு வேலை இல்லை அதனால் எழுதுகிறேன் நீங்கள் அப்படியா? அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..அதுபோல அவ்வப்போது ஏதேனும் பரிசுப்பொருட்களும் வாங்கி அனுப்பவும் நன்றி.

Indli