Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Thursday, November 7, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (07/11/2013) ஆரம்பம் ஸ்பெஷல்

தீபாவளி மிச்சர்

தீபாவளியன்று நல்லா மூக்குபிடிக்க தெருவெல்லாம் வாங்கி தின்றுவிட்டு சென்னையில் முக்கிய இடங்களில் எல்லாம் பாம் வெடிக்கப்போகிறது என கமிஷனர் ஆபீஸில் புரளியைக்கிளப்பிவிட்டு மெரினா கடற்க்கரை, சத்தியம் தியேட்டர் மற்றும் சத்தியபாமா யுனிவர்சிட்டி ஆகிய பகுதிகளில் பாமை வெளியேற்றினேன்.

திருட்டு முழியின் மூலமாக கண்டறிந்து பொதுமக்கள் தர்ம அடி அடித்தனர். அடி முடிந்ததும்

அடிச்சு முடிச்சிட்டிங்க தர்மம் எங்கே?

என உரிமைக்கு குரல் குடுத்தேன். தர்மம் போட்டனர்.

 உடனே நல்ல தொழிலாக இருக்கிறதே என்று அதே வேலையை தொடர்ந்தேன் தூரத்தில் ஒருவன் மரண அடி அடிக்கனும்டா என பாய்ந்தான் கார்பன் டை ஆக்சைடென காற்றில் மறைந்தேன்.


 ***********************************************

இப்போது விமர்சனங்களுக்கிடையே இயக்குனர்களுக்கும் நடிகர்களுக்கும் விர்ச்சுவல் பரிசுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன் அதாவது விமர்சனம் எழுதும்போதே

தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் பார்சேல்...........

புல்லட் பீர் பார்சேல்.....

போன்ற விர்ச்சுவல் பரிசுகள்.....


தீபாவளியை முன்னிட்டு போனஸ் கேட்டு மனைவியிடம் போராட்டத்தில் இறங்கினேன் விர்ச்சுவல் சம்பளம் குடுத்து, விர்ச்சுவல் சாப்பாடு போட்டு செருப்படி மட்டும் ரியாலிட்டியில் கிடைத்தது

*******************************************************

பொட்டு வெடி டப்பா ஒன்றினை நண்பர் ஒருவர் பரிசளித்திருந்தார் வெடிக்க மனைவியிடம் அனுமதி கேட்டேன் தீபாவளியாதளால் அனுமதி கிடைத்தது.

உடனே உரிமைஎடுத்து huggy time என்று கட்டிப்பிடிக்க முயற்ச்சித்தேன் 

மனைவியும் ஆமா ஹக்கிஸ் டைம் போய் குழந்தைக்கு ஹக்கிஸ் மாற்றிவிடு என் கன்னத்தைப்பெயர்த்தார்.

பன்றியும் தன் வாயால் கெடும் எனும் பழமொழியை நினைத்துக்கொண்டேன்.

வேலை முடிந்ததும் சட்டென பாம்பு மாத்திரைகளை பொருத்தி வைத்து மனைவியை மூச்சுத்திணற வைத்து நழுவினேன்.

************************************************

மும்பை பதிவர் நண்பர் அதுல் குல்கர்னி அவர்களிடம் மனைவி  அடியிலிருந்து தப்பிக்க  ஐடியா கேட்டிருந்தேன் அவர் தனது போலிஸ் நண்பர் உதவியுடன் குண்டு துளைக்காத ஜாக்கெட் பரிசளித்தார். உடனே ஜாக்கெட்டுடன் வீட்டுக்கு வந்து வீராவேசமாக பேசினேன்.

மனைவி மற்றும் மாமியார் கூட்டனி தாக்குதல் நடத்தி அடித்து  அடித்தே ஜாக்கெட்டை கிழித்தனர்.

தரமில்லாத ஜாக்கெட் போல :(.

சாவின் விளிம்பிலிருந்து தப்பித்திருக்கிறேன் .

ஆனால் இந்த ஊழலுக்கு காரணமான ஒருத்தரையும் சும்மா விடமாட்டேன்.
என சபதமிட்டு மும்பைக்கு திருட்டு  ரயிலேரி இருக்கிறேன்.



**************************************************


வாசகர் கடிதம் 


தமிழ் தளங்கள் வைத்து இருப்பவர்கள் http://ad30days.in விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு,

தமிழ் அட்சென்ஸ் Ad30days.in ல் இணைந்து, உங்கள் தமிழ் தலத்தில் விளம்பரங்கள் காண்பிப்பதன் மூலம் நீங்களும் பணம் சம்பாதிக்கலாம். இப்பொழுதே சேருங்கள் http://publisher.ad30days.in/publishers_account.php . பதிவுசெய்து முற்றிலும் இலவசம் .

வாரம் ஒரு முறை உங்களின் வருமானத்தை நீங்கள் பெற்றுகொள்ளலாம்.

--------------------------------------------------
அன்பின் தமிழ்,


                      உங்களுடைய  " பதிவுசெய்து முற்றிலும் இலவசம் ", "தலத்தில்" ஆகிய சொல்லாடல்கள் மூலம் நீங்கள் என்னுடைய நீண்டநாள் வசாகார் என அறிகிறேன் என்னை நீங்கள் ரோல்மாடலாக கொண்டிருப்பதும் தெரிகிறது. நன்றி.

உங்களுடைய தளத்தை கடந்த ஒரு வார காலமாக ரிப்ரெஷ் செய்து கொண்டிருக்கிறேன், இன்னும் பணம் வரவில்லை.
உங்களுக்கு என் கண்டனங்கள்.

*********************************************

தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிய நேர்ந்தது உடனே 1975ல் பெயிலான பத்தாம் வகுப்புத்தேர்வுக்கு மறுதேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறையிடம் கொஸ்டின் பேப்பர் கேட்டு விண்ணப்பித்திருந்தேன்.

நீதிமன்றம் வழக்கை
Rehabilitation Centre for Mentally Ill Persons என்னும் அமைப்புக்கு  பார்வார்ட் செய்திருக்கின்றனர் 


ஹ்ம்ம்ம்ம் நீதி கிடைக்கிறதா பார்க்கலாம்

Version 2


தகவலறியும் உரிமை சட்டம் பற்றி நண்பர் நக்கிலக் விளக்கினார். உடனே இந்த ஆண்டு SSLC  தேர்வுக்கு அப்ளை செய்துவிட்டு தகவலறியும் உரிமை சட்டம் மூலமாக தேர்வுத்தாள் கேட்டு நண்பர் காடுவிரும்பல் மூலமாக வழக்கு தொடர்ந்தேன் நீதிபதி  மூவரையும் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். சட்டம் அதிகாரவர்கத்திற்கு மட்டுமே என்பது மறுபடியும் நிரூபணமாகியுள்ளது..


**********************************************
நான்வெஜ் 18+

ஆரம்பம் படத்தில் நயன்தாரா வரும் ஹோட்டல் காட்சியை கண்டுகழித்துக்கொண்டிருந்தேன் அப்போது நயன்


"தம்பி அசஞ்சா சுட்டுடுவேன் "

 என சொன்னதும் முச்சை அடக்கிப்பிடித்து படம் பார்த்தேன் 



பிரியங்களுடன் 

சாம் 

Tuesday, October 22, 2013

ரொம்ப தேங்கஸ் ஜாக்கியன்னா

சென்னை அதன் மாலை நேர இயக்கத்தில் குறியாய் இருந்தது....

நேற்று  இரவு எட்டு மணி... அந்த நபர்    தனது தள்ளு வண்டியை தள்ளிக்கொண்டு வியர்வை வழிய கேகே நகர் சிவன் பார்க் அருகே தள்ளிக்கொண்டு நடந்து சென்றுக்கொண்டு இருந்தார்....

முதலில் அவரை நான்  தாண்டி சென்றாலும் மனது கேட்கவில்லை... ஒருவேளை பெட்ரோல் இல்லையென்றால் அந்த நபர் எவ்வளவு தூரம் நடந்து செல்ல  வேண்டி வரும்? பக்கத்தில் பெட்ரோல் பங்கும் இல்லை...



காலையிலேயே மனைவியிடம் விளக்குமாத்து பூசை வாங்கியாகிவிட்டது ...வீட்டுக்கு அவசரமாக போய் பெரிய வேலை இல்லை என்பதால் அந்தநபர்   நடந்து வர  காத்திருக்க ஆரம்பித்தேன்...

இது போல வலிய உதவி செய்ய போகும் போது இருக்கும் பெரிய  பிரச்சனை என்னவென்றால்..?  இது போன்ற நபர்கள் நம்மை தோஸ்த்தானாவாக  நினைத்துக்கொண்டு  நம்முடைய வாயில் வெற்றிலை பாக்குபோட வைத்து விடுவார்கள்.

நானும் நண்பர் தள்ளுவண்டி தங்கராசுவும் 

நாய் நக்கும் இயல்புடையது .... நான் காப்பாற்றும் இயல்புடையவன்(அடுத்தவன் காசில்)   என்ற அந்த சித்தாந்தத்தை ஒரு சில இடங்களில் நான்பிரயோகப்படுத்தி ஆசுபத்திரியில் அட்மிட் ஆகியவன் ...ஒரு வேளை அந்ததள்ளுவண்டிமீன்பாடி  வண்டியாக இருந்தால் அய்யகோ.....இப்படி முட்டாள்தனமாக உளறிவிட்டு காரணமே இல்லாமல்   சரி கிளம்பலாம் என்று நினைத்தேன்...

 ஒருவேளை அந்த நபருக்கு இன்று தேர்வு ஏதேனும் இருந்தால்  லேட்டாகிவிடுமே இன்னும் அந்த  வேதனையோடு எவ்வளவு தூரம் நடக்க வேண்டுமோ? என்று  யோசித்த காரணத்தால் நின்று வெயிட் செய்தேன்...


த்தா என்ன பிரச்சனை. பெட்ரோல்  இல்லையா?

பங்க் பக்கத்துல எதுவும்  இல்லை... நான் வேணா வாங்கி வரட்டா...

இல்லைங்க  இன்னும் ரெண்டு தெரு தள்ளிதான் வீடு... தம்பிக்கு போன் செஞ்சி இருக்கேன்...  வந்துக்கிட்டு இருக்கான்...

அப்ப சரிசார் ... நான் கிளம்பறேன்....

அண்ணா.....

நான் திரும்பினேன்...



பொளேர் என கன்னம் பழுத்தது ...ஏன்டா   நானும் 40 வருஷமா தள்ளு வண்டி தள்ளிகிட்டு இருக்கேன் மனநிலை பிறழ்ந்தவன் கூட பெட்ரோல் இல்லையான்னு  கேள்வியை கேட்டதில்ல போ அந்தால என் தாக்கத்தொடங்கினார்.

ரொம்ப தேங்கஸ்ண்ணா என்றேன் .....

ஏன்டா இந்த அடி அடிக்கிறேன் தேங்கஸ்கிற என்றார் 

இல்ல தினுமும் பொண்டாட்டி அடிப்பா இன்னிக்கு நீங்க அடிச்சு ஒரு மாறுதல் குடுத்துருக்கிங்க அதான் என்றேன் 

 அண்ணா என  அழைக்கு சில அழைப்புகளில் பாசமும், நேசமும் , கனிவும் ஒளிந்து இருக்கும்.

ஆனாலும் அடி தொடர்ந்தது. நடைபாதை மக்களும் ஆளுக்கு ஒரு கை போட்டனர் 

இந்த  தேங்ஸ்ண்ணாவில் எல்லாமும் உணர்ந்தேன்..(என்னா அடி )



பிரியங்களுடன்
சாம் .


Monday, September 9, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (09/09/2013) ஆண்டிபட்டி

எவ்வளவு ஆடிச்சாலும் தாங்குவான் அப்படின்னு இருந்தா..மனைவியும் , மாமியாரும் வாலை ஆட்டிக்கிட்டுதான் இருப்பாங்க... இவ்வளவு ஏன் சீராட்டி பாராட்டி  வளர்த்த   என் மச்சினிச்சி மரகதம் கூட  நாளைக்கு என்னை செருப்பால் அடித்துவிட்டு நாயின்னு நெனசிட்டேன்னு சொல்லும் நாள் வெகுதொலைவில் இல்லை.
பால்ய கால நினைவுகள் :(


இதை உணர்ந்து உடனடியாக அடுத்த வீட்டுக்காரர்  வீட்டை அவரது மனைவியுடம் ஆக்கிரமிக்க திட்டமிட்டேன். வன்புணர்வு வழக்கில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள் 

******************************************
பக்கத்து வீட்டில் செருப்பு திருடிய வழக்கில் எனக்கு 15 நாட்களுக்கு பின் ஜாமீன் கிடைத்திருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் மலையாளி  இப்போது எனக்கு ஜாமீன் கிடைத்தாலும்  பேஸ்மென்ட்டில்  மலையாளிகளின் லாபி காரணமாக நியாயம் கிடைக்காமல் போய்  விடுமோ என்று யோசிக்க வைக்கின்றது. எதுவும் நடக்கலாம்..  காரணம்  அவர்கள் ஒற்றுமை அப்படி... (என்னா அடி )
************************************
சென்னை  கவிமணி சாலையில்  அதிகாலை இரண்டு மணிக் சைக்கிள் ரேசில் ஈடுபட்டுகொண்டிருந்தேன் ... வாட்ச்மேன்கள் கண்டித்தும், திரும்பவும் சேசிங், வீலிங் என்று  இறங்கினேன் ...  விரட்டிப்பிடித்து சாணியை வாளி வாளியாக ஊற்றி குளிப்பாட்டி அடித்தனர்  


எனது ரேஸ் சைக்கிள் 

பாஸ்ட் பியுரியஸ் படம் பார்த்துட்டு பைக் ரேஸ் போனா, போதையில இருக்கோம்,... எவன் என்ன செஞ்சிடுவான்னு பார்த்துடலாம்ன்னு நினைச்சா இப்படித்தான்  ஆவும் என பாடம் கற்றுக்கொண்டேன் 

***********************************************************

மிக்சர்

 சென்னை முகப்பேரில்   ஒரு பெண்ணை கிண்டலடித்த என்னை செருப்பால் அடித்து கொடுரமாக கொடுமைப்படுத்தி இருக்கின்றார்கள் அப்பெண்கள் ... அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிராணி நல  சங்கங்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள்...

******************************************************

காலையில் வீட்டு கேட்டை திறந்து ,கேட்டுலயே சாவியை அதுலேயே விட்டு விட்டு மறந்துட்டேன்... அரைமணி நேரம் கழிச்சி கதவுக்கிட்ட போறேன்... கேட்டுல பூட்டு சாவி தொங்குது.

ச்சே எவனாவது இங்கிலிஷ் படத்துல திருடறது போலகேட்ல இருக்கற பூட்டு சாவியை இந்த அரைமணி நேரத்துல எடுத்துக்கிட்டு போய் சோப்புல அச்சி போட்டு ,தெரியாம வந்து வச்சிட்டா?

கோத்தாநம்மக்கிட்டயேவாஉடனே சாவியை நான் மொந்து பாத்தேன்...ம்ஹும்  சாணி நாத்தம் அப்போதுதான் சாவி சாக்கடையில் விழுந்தது நியாபகம் வந்தது ... இதுல பெரிய ஷெர்லக் ஹோம்ஸ்ன்னு நினைப்பு மயிறு வேற...

குறிப்பு :  ஷெர்லக் ஹோம்ஸ் - வீட்டில் குழந்தைக்கு வைத்திருக்கு செரலாக்கினை திருடி தின்று மாமியாரிடம் சீவக்கட்டை அடிவாங்குவத்தின் காரணமாக அமைந்த காரணப்பெயர் 

******************************************
கடனுக்கு வேலை செய்யறவனை விடரசிச்சி வேலை செய்யறவனை எனக்கு ரொம்பவே பிடிக்கும்... முந்தா நாள் நைட்டு ஓஎம்ஆர்ல அந்த ஷேர் ஆட்டோவை பார்த்தேன்... ஷேர் ஆட்டோ எண். TN -07-AM 5758- PIAGGIO டைப் ஷேர் ஆட்டோ... ஆட்டோவுக்கு உள்ளே ரெண்டு பக்கமும் புக்ஸ்... பேப்பர்... ஒரு பக்கம் வார இதழ்கள் மறு பக்கம் தினசரி பேப்பர்... அதுமட்டும் அல்ல சின்னதா டிவியில் சிஎன்என் ஐபிஎன் இங்கிலிஷ் நியூஸ் ஓடிக்கிட்டு இருக்கு....


 பிட்டுப்படம் தெரியுமா எனக்கேட்டேன் அடித்துவிரட்டினார் த்தா 5 ஓவா மிச்சம்னு மனதைதேத்திக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன் . ஆனாலும் மனதில் ஒரு  இனம்புரியாத குழப்பம்,

அநேகமா அது அடையார்திருவான்மியூர்ஓம்ஆர் ரோட்டுலதான் அந்த ஷேர் ஆட்டோ சுத்திக்கிட்டு இருக்கும்... ஒருவேளை நீங்க யாராவது பார்த்தா அந்த ஷேர் ஆட்டோடிரைவரிடம்  பிட்டு வருமான்னு கேட்டு எனக்கு தகவல் சொல்லவும்.....


மனசத்தம் (Mind voice) : நான் பெற்ற அடியை அனைவரும் பெருக 

********************************************

நள்ளிரவு 15 கொசுக்களை கொன்று விட்டு என்னை நானே சீரியல் கில்லர் என பிரகடனப்படுத்திக்கொண்டென் FBI கைது செய்து Guantamo சிறை  கொரில்லா செல்லில் கொரில்லாவாக பணிஆனை வழங்கியிருக்கின்றனர் (அவர்களுக்கு என் நன்றிகள் )....

என் ஐடி கார்டு புகைப்படம் 


*******************************************

மகளிர் தினம் முதல் மணமாகாத  பெண்களின் எதிர்கால நலனை கருத்தில் என்னுடைய குருநாதர் சேலம் சிவராஜ் ஆணைக்குஇணங்கி ஆங்கில பட விமர்சனங்கள், ஹாட் ஹாட்டர்  ஹாட்டஸ்ட், அடல்ட் கார்னர்  நிறுத்தப்படுள்ளது 




Tuesday, June 18, 2013

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (18/06/2013) புரசைவாக்கம்

ஆல்பம்..



எனக்கு ஏன் அனானிகளை பிடிப்பதில்லை? மில்லியன் டாலர் கேள்வியின் விடையாக கிடைத்த தகவல்கள் கீழே

1.அனானிகள் மனித இனத்தை சேற்ந்தவர்களே அல்ல...
2. அனானிகள் யூதர்கள்
3.அனானி ஹிட்லரின் ப்ரதான அல்லக்கை
4.அனானிகளிடம் ரேஷன் கார்டு இருப்பபதில்லை
5.அனானிகள் மீ த பர்ஸ்ட்டு பின்னூட்டம் இடுவதில்லை

இப்போது தெரிகிறதா என்னுடய வெறுப்பிற்க்கான காரணம்


********************************

இலக்கியம்

மனம் ஓர் குரங்கு என்று சொல்லுவார்கள்.ஆனால் நானே ஒரு குரங்காக பிறந்ததற்காக மகிழ்ச்சி கொள்கிறேன் .பூமியில் பிறந்த மனிதனுக்கு என்றோ ஓர் நாள் காதல் என்ற ஓர் தெய்வீக உணர்வு நிச்சயமாக வந்திருக்கும் .

இரு தலையாக காதல் வரா விட்டாலும், ஒரு தலையாக நிச்சயமாக காதல் உணர்வுகள் அவன் மனதினைக் கட்டிப் போட்டிருக்கும் 
என்று என்னுடைய குடும்ப நண்பர் சொன்னார்.

நான் உடனே

 "நமக்கெல்லாம் ஒரு தலை தானே இருக்கிறது எப்படி இரு தலை காதல் வரும்"


 என்று வினவினேன் தலை வீங்கும் அளவுக்கு கொட்டி வைத்து விட்டார். உடனே தெரு முனைக்கு ஓடி சென்று அவரை கேட்ட வார்த்தையில் திட்டி விட்டு ஓட்டம் பிடித்தேன் போர் குழாயில் விழுந்திருக்கிறேன். நண்பர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு போன் செய்து நேரலைக்கு ஏற்பாடு செய்யவும்.




********************************

கிரிக்கெட் பைத்தியமாகத்தான் இருந்தேன்.... எப்போது சோனி சிக்ஸ் சானலுக்கு சண் டைரக்டில் மாசம் 30 ரூபாய் என்றார்களோ அன்றோடு கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்திவிட்டென் ஆனாலும் சூதாட்டம் அது இதுவென சப்பைக்கட்டு கட்டி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறேன். இதுவும் ஒரு பிழைப்பு


********************************

மிக்சர்.

 அம்மா கொண்டு வந்த திட்டதில் நான் பாராட்டும் திட்டம் அம்மா உணவகம்தான்...  அம்மா உணவகத்தில் சாப்பிட்டு விட்டு  சாப்பிட்ட தட்டை அப்படியே அபிட் செய்து வீட்டை நோக்கி விரைந்தேன். மகளிர் சுய உதவிக்குழுவினர் விரட்டி வவந்து வன்முறையை பிரயோகித்தனர்.

உடனே முகபுத்தகத்தில்

" ஏதோ ஏழை பாழை மகளீர் சுயஉதவிகுழுக்கள் வாயை  கட்டி வயித்தை  கட்டி ஏதோ வேலை செஞ்க்கிட்டு இருக்குங்க... அதுங்க அடி மடியில கை வைக்காதிங்கடே... நல்லா இருக்க மாட்டிங்க."

என்னும் நிலைத்தகவலைப்போட்டுவிட்டு லைக்குக்காக காத்திருந்தேன்.
********************************

 அப்படி இப்படி என UPS ஸ்டார் ஜெட்லி இயக்கியகுறும்படம் .... இன்றுடன் 50வதுவாரத்தை கொண்டாடுகின்றது... என்படத்தை விமர்சிக்க சினிமா அறிவு   நிச்சயம் இருக்க வேண்டும் என்று தனது வலைதளத்தில் சொன்னதாக தகவல்...


********************************

இந்த வார விகடனில் விகடன் மேடையில்....

பதிவர் ஜெட்லி ஒரு கேள்விக்கு நச்ன்னு பதில் சொல்லி இருக்கின்றார்...

உங்களைப் பற்றிய விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வீர்கள்?''

''முதலில் நன்றாக கதறி அழுவேன். பின்பு முகத்தைத்துடைத்துவிட்டு அம்மா உணவகத்தில்  8 இட்லி, பின்பு தெருவில் சுற்றும் தெரு நாய் மீது கல்வீச்சு நடத்திவிட்டு அதனிடம் கடி வாங்குவேன். பின்பு எதிர் வீட்டு கவிதா அக்காவிடம் அரைமணி நேர அரசியல் விவாதம், பின்பு அலுவலகம் முடிந்து வரும் மனைவியிடம் வழாக்கம் போல விளக்குமாத்தடி,  இரவு சமையல் வேலை அடுத்து பாத்திரம் மற்றும் கக்கூஸ் கழுவுதல். இதெல்லாம்  முடிஞ்சதும் பக்கத்து வீட்டு Wi Fi திருட்டுதனாமா திருடி முகபுத்தகத்தில்''விமர்சிக்கப்படும் வரைதான் நான் உயிரோடு இருக்கேன்னு அர்த்தம். என் மீதான விமர்சனங்கள் நின்னுட்டாநான் இறந்துட்டேன்னு நினைச்சிக்கோங்க!''என்று ஸ்டேட்டஸ் போடனும் '(லூசு மோகன் வாய்சில் படிக்கவும்)  புச்சிருக்கு நைனா

********************************

OLDZEE  முதியோர்  பள்ளியில் படித்த போது கடலூர் ஆண்டிநாயர் தெருவில் இருக்கும் கிளை நூலகத்தில்,மல்கோவா ஆண்டி  பத்திரிக்கையை விரும்பி படிப்பதுண்டு... சரோஜாதேவியின் ஒரு பக்க கட்டுரையை தீவிரமாக வாசித்த காலம். நேற்று நான் பார்த்த புதிய பறவை படத்தில்  சரோஜாதேவி வந்து இருந்தார். அப்படியேதான் இருக்கின்றார்...

சேலை அணிந்து...ஆனால் எனக்கு 15 வயதாக இருக்கும்போது போட்டிருந்த அதே மஞ்சள் நிற சேலையையே இன்றும் அதே படத்தில் அணிந்திருந்தார் 
... அதுக்காகவே அவருக்கு ஹேட்ஸ் ஆப் சரோஜா மேடம்......


********************************

ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்


கருப்பு கண்ணாடி அணிவதில் ஒரு உபகாரம் இருக்கின்றது. கருப்பு கண்ணாடி அணிந்தவர் எதிரில் இருப்பவரை நன்றாக பார்க்கலாம்... பிடிக்காதவர் என்றால் கவனிக்கவில்லை என்று சொல்லி டபாய்க்கலாம்...ஆனால் கண்ணாடி அணியாதவர்... பார்த்தாரா இல்லையா என்று புரியாமல் விழிப்பார்கள்... அப்படி கருப்பு கண்ணாடி அணிந்த பதிவர் கில்மா குமாருக்கு இரண்டு முறை வணக்கம் வைத்து ஏமாந்து இருக்கின்றேன்....
********************************

நேற்று மவுண்ட் ரோட்டில் நின்றுக்கொண்டு ஒரு ஆயிரம் ரூபாய் பணமுடையில் தவித்து போனேன்... எதிரில் ஈகோவுக்காக 88 கோடியை செலவு செய்து மருத்தவமனையாக மாறப்போகின்றது புதிய  தலைமைசெயலகம்... துறைமுக மதுரவயல் பறக்கும் சாலை 500 கோடி முழுங்கி 20 சதவிகித பணிகளை மட்டும் முடிந்து  அதே ஈகோ  காரணமாக பாதியில் நிற்க்கின்றது...பல   கோடிகளை கடலில் விழுங்கி விட்டு சேதுசமுத்திரம் முச்சு பேச்சு இல்லாமல் இருக்கின்றது...பணப்பிரச்சனை,கடன்  எல்லாம் சமான்யனுக்குதான்.... அதிகாரவர்கத்துக்கும் அரசுக்கு அது பற்றிய கவலையே இல்லை.

உடனே தலைமைச்செயலகம் சென்று என்னுடைய பங்கு பணத்தை திருப்பத்தரவேண்டும் என மம்மியிடம் கொரிக்கை வைத்தேன், கூலிப்படையை ஏவி விட்டிருக்கிறார்.

இது நியாயமா? வாசகர்கள் காப்பாற்றவும்.

********************************
மெட்ரோ ரயில்  பணிகள் பாதி முடிந்து  விட்டன...மெட்ரோ ரயில் பாலங்கள் நகரத்தில் ராட்சத அனகோண்ட பாம்பு  போல வளைந்து நெளிந்து  செல்கின்றன. உடனே அவற்றைப்பிடித்து கிண்டி பாம்புப்பண்ணையில் விற்க்கலாம் என முயற்ச்சி செய்தேன் பலனளிக்கவில்லை.

*******************************
அன்புடம்

பாதிவார் சாம்

Thursday, September 27, 2012

மான் வெஜ் ஆனா நான் நான்வெஜ் (27/09/1947) ப்ளூட்டோ




கூடங்குளத்தில் சொந்த   நாட்டு மக்களையே அடித்து தும்சம் பண்ணி இருக்கின்றார்கள்…
இந்த செய்தியை கேட்டதும் கூடங்குளத்தை தனி நாடக அறிவிக்கும்படியான கோரிக்கையுடன் ராஜபக்‌ஷேவை சந்திக்க சென்றேன் வெலிகடா
(Welikada ) ஜெயிலில் சாணி அள்ள வைத்திருக்கிறனர்.

*********************************************************************

அதிமுக  ஆட்சிக்கு வந்து    ஒன்றரை வருடங்கள் ஒடி விட்டன…. நாங்கள் ஆட்சிக்கு வந்தால்   ஆறு மாதத்தில் மின்வெட்டை போக்குவோம் என்றார்கள். இன்னும்  மின் வெட்டை சரி செய்த பாடில்லை… இதை எந்த ஊடகமும் கேட்க வக்கில்லை…  பல சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன..  அது கூட பராவாயில்லை.. நேற்று காலை பல் துலக்காமல் சாப்பிட அமர்ந்தேன் மனைவி கண்டுபிடித்து

”ஏண்டா பல் விளக்காமல் சாப்பிட வந்தாய்” என்றார்..



ஊஞ்சல் ஆடும்போது எடுத்தது 


கரண்டு இல்லத்ததால் என்றேன்.

 கரண்டுக்கும் பல்லு விளக்குவதற்க்கும் என்ன சம்மந்தம் என்றார்

 நான் உடனே சைக்கிள் டையனமோவில் பல் போன்ற அமைப்பு நீரின் உதவியால் சுழல்வதனால் மின்சாரம் வரும். அதேபோல்  இன்று மின்சாரம் இல்லாததால் நான் எனது பல்லை நீர் வைத்து சுழற்றவில்லை என்றேன்.

வெளக்காத பல்லுக்கு அறிவியல் விளக்கமா என விளக்கமாற்றால் விளாசி

சங்கிலியில் பிணைத்து வெயிலில் வாழைமரத்தில் கட்டிப்போட்டிருக்கின்றார். நண்பர்கள் வந்து காப்பாற்றவும்.


*********************************************************************



திரும்பவும் பெட்ரோல்  விலை 5 ரூபாய்க்கு ஏற்றப்போவதாக பெட்ரோலியா(மங்கோலியாவில் அண்டை நாடு)  நிறுவனங்கள் கொஞ்சிக்குலாவி அறிவிக்க  இருக்கின்றன… திரும்ப 78 ரூபாய் லெவலுக்கு போவும்ன்னு நினைக்கிறேன்.. இருந்தாலும் வண்டி ஓட்டித்ன் ஆவனும் இல்லைன்னா லாஸ் ஆப் பே தான். என்று ரோட்டில் ஒருவர் புலம்பிக்கொண்டிருந்தார்.



உடனே நான் பெட்ரோல் விலை ஏறினால் ஆப்பேக்கு (PIAGGIO APE) எப்படி லாஸ் ஆகும்? அது டீஸலில் தானே ஓடுகிறது என என்னுடைய எதிர்ப்பை நியாயமாக பதிவு செய்தேன்.

காதை கடித்து வைத்துவிட்டார்........
இது போன்ற மூடர்களை என்ன செய்வது?


*********************************************************************


கூடங்குள மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கு போராடிக்கொண்டு இருக்கும் போது ஸ்ரீரங்கத்தில் தொடர்ச்சியாக அன்னதான விழாவை இனிதே நடத்தி நம்மை மெய் சிலிர்க்க வைத்து  இருக்கின்றார்... நம் முதல்வர் ஜெ  இந்த விஷயம் அறியக்கிடைத்ததும் உடனடியாக ஸ்ரீரங்கம் சென்று அன்னதானப்பந்தலை வட்டம் சுற்றத்தொடங்கினேன்.

மம்மியின் பாதுகாவலர்கள் பெட்டக்ஸில் எத்தி கால்வாயில் தள்ளினர்.
உடனே அங்கேயே உட்கார்ந்து பிடில் வாசிக்க தொடங்கினேன் முதல்வரின் பாதுகாப்பு கருதி வண்டலூர் பூங்காவில் கூண்டு எண் 19 ல் அடைத்துள்ளனர்




*********************************************************************
ஜெமினி பிளை ஓவர் கிட்ட இருக்கற பார்க் ஓட்டல்  கிட்ட ரைட் கட் பண்ணி சேம வேகத்துல வந்துகிட்டுஇருந்தேன்.. இரண்டு பேர் என்னை துரத்திகிட்டு  டேய் டேய் பண்ணாடன்னு கத்திகிட்டு  வந்தாங்க...  நானும் கடன்காரர்களாக இருக்குமோ என்று வேகமாக கொரங்கு பெடல் போட தொடங்கினேன் .
வாசகர்களுடன் அடியேன் :)))))

                                   
வள்ளுவர் கோட்டத்துகிட்ட வண்டியை நிறுத்தினேன்.. சார் நான் உங்க  வலை ரசிகர்...என்று பெயர் சொன்னார்...

அய்யோ நான் மீன் பிடிப்பதில்லையே என்றேன். பிடித்து பரங்கிமலையின் உச்சியிலிருந்து உருட்டி விட்டனர் 




*********************************************************************
நான்வெஜ் 18+


கிரிக்கெட் ஃபீவர் அடிக்கிறது என்று நண்பர் சொன்னார் உடனே க்ரோஸினுடன் அவரை பார்க்க சென்றேன் அசிங்கமாக திட்டினார் உடனே அவரை பழிவாங்க வேண்டி ஃபேஸ்புக்கிலிருந்து அவரை அன்ஃப்ரெண்ட் செய்து விட்டு கிரிக்கெட் என கூகுளில் தேடத்தொடங்கினேன்

”கிரிஜாவில் கிரவுண்டில் ஒரு கிரிக்கெட் மேட்ச்”

என்னும் கதையை படித்துக்கொண்டிருந்தேன் வேலையை விட்டு எடுத்திருக்கின்றனர்.

எனது வாசகர் வண்ணமுத்து



கிரிக்கெட் உலகக்கோப்பை நடக்கும் போது கூட கிரிக்கெட் பத்தின பதிவுகள் படிக்கக்கூடாதா... என்னா உலகம்டா இது?*********************************************************************

சமீபத்தில் பார்த்த வீடியோ, பதிவுலக பின்னூட்ட சண்டைகளை நினைவுபடுத்தியது

                                         
*********************************************************************
அன்புடன்

சாம் ஆண்டர்ஸன்

Friday, August 24, 2012

பதிவர் மாநாடு 2012 சாம் அனுபவங்கள்


     கடந்த முறை பதிவர் சந்திப்புக்கு நான் தான் கடைசியாகப் பதிவு போட்டேன். அதனால் இந்த முறை நான் தான் முதலாவது ஆளாக இருக்க வேண்டும் எனப் பதிவர் சந்திப்பு துடங்கும் முன்னரே பதிவிடுகிறேன்.

பதிவர் சந்திப்புக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பதிவர் மீனாட்சிபவன் மணிக்குமார் என்பவர் அழைத்திருந்தார். நானும் மீனாட்சிபவன் தானே என்று மீனாட்சிபவனில் தயிர் வடை சாப்பிட்டுக்கொண்டே காத்திருந்தேன்.... 

ஆனால் நெடுநேரமாகியும் அவர் வரவில்லை. சாப்பிட்ட பில் வேறு தர வேண்டும். உடனடியாக மீனாட்சிபவனுக்கு மிஸ்ட் கால் குடுத்தேன். அவர் திரும்ப அழைத்தார்.
“யோவ்... என் பேருதான்யா மீனாட்சிபவன். உடனடியா அனிமல் ப்ளானட் புக் பேலஸ்க்கு வந்துருய்யா” என்றார்.



“த்தா... ஏமாந்துட்டோமே” என முனகிக்கொண்டே பில் தராமல் தப்பிக்க வழி தேடிக் கக்கூஸுக்கு ஓடினேன். வெண்டிலேட்டர் வழியாக முகத்தில் கரித்துணியைக் கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆன போது பின்பக்கமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ரவுடிகள் காரணமேயில்லாமல் இரும்புக்கரம் கொண்டு என்னை நையப்புடைத்தனர்.
ரவுடி ஒருவனிடம், “எதுக்கு சார் அடிக்கிறீங்க?” என்றேன்.

“நாங்க தடையர தாக்க படம் பாக்கலன்னு நெனக்கிறியா?” த்தா ம்மா என்று அடியை கண்டின்யூ செய்தனர். (அவர்களுக்கு என் கண்டங்கள்)

பின்பு ஒரு வழியாக கூட்டத்துக்கு வந்து சேர்ந்த நான் ஆலோசனையில் என்னென்ன சமைக்கலாம் என்னும் விவாதத்தை தொடங்க முயன்றேன். போரூர் சானா ஆண்டர்சன் பக்கத்தில் அமர்ந்து இருந்தார். “மதியத்துக்கு எல்லாருக்கும் பிரியாணி போடலாம்” என்றேன் . “சாம்பில் குடு” எனக் கலவரத்தில் இறங்கினேன். அதைக் கூட்டத்தில் ஒருவர் மொபைல் ஃபோனில் புகைப்படம் எடுப்பதைப் பார்த்ததும் பம்மி அமைதியாக இருந்துவிட்டேன்.

அடுத்ததாக லோக்கல் பதிவர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தேன். அதை மறுத்து மூத்த பதிவர்களுக்கு மட்டும் தான் மரியாதை எனச் சொல்லிவிட்டனர்.


தயிர்வடை செரித்துப் பல நேரம் ஆகிவிட்டதால் மீண்டும் சாப்பாடு பற்றிக் கேட்டேன். போரூர் சானா முறைத்தார். உடனே புத்தகங்களை விசிரி அடித்துப் போராடத் தொடங்கினேன். கைலியப்பன் கைலியைக் கழற்றி முகத்தில் சுற்றி அடி பிரட்டி எடுத்து விட்டார். சரி என்று இரண்டு புத்தகங்களை திருடிக்கொண்டு ஓடத்தொடங்கினேன். ஹி ஹி ஹி

பதிவர் சந்திப்புத் தினத்தில் மண்டபத்துக்கு வந்தேன். வாசலில் இரு பெண்கள் பன்னீர் தெளித்தனர். உடனடியாக “அனானிகள் என் மீது தண்ணீர் ஊற்றித் தாக்குதல் நடத்துகின்றனர்” எனக் கூவத்தொடங்கினேன். நண்பர் காடு ரமேஷ்குமார் வந்து சாப்பிடும் அறைக்கு வழி காட்டினார். நடையைக் கட்டத் தொடங்கினேன்.




உள்ளே ஃபுல்லாக மக்கள் அமர்ந்திருந்தனர். அப்போது ஒரு பதிவரிடம் சென்று “உங்கள் பெயர் என்ன சகோ?” என்றேன். “பசிக்கலா” என்றார். “பசிக்கல பசிக்கலன்னு சொல்லிட்டே பந்தியில ஒக்காந்துருந்தா என்ன அர்த்தம்?” என்ற நியாயமான கேள்வி ஒன்றைக் கேட்டேன். தென்றல் புயலாக மாறி தாக்குதல் நடத்தத் தொடங்கியது.


சாப்பிட்டுவிட்டு முத்த பதிவர்களுக்கான பதிவுத்தொகையைப் பெறுவதற்காக மேடைக்குச் சென்று “யாரை முத்தமிட வேண்டும்?” எனக் கேட்டேன்.

அமைதியின் வடிவாய் இருந்த கவிஞர் மிதிமதி என்னைக் கால்மிதியாக மாற்றி மிதித்தார். பட்டிணத்தார் பாண்டி அட்டாக் பாண்டியாக மாறித் தாக்குதலை நடத்தினார். “அண்ணே மூத்த பதிவர தான் முத்த பதிவர்ன்னு நென்ச்சுட்டேன்”னு சமாளித்தேன்.

கொஞ்ச நேரம் கழித்து என்னிடம் மைக்கை கொடுத்தனர்.


“பதிவர்களே பதிவர்களே நீங்கள் என்னை அமேரிக்காவில் தூக்கிப் போட்டாலும் நான் லோக்கலாகத்தான் இருப்பென் STD ஆக மாற மாட்டேன்“ எனப் பாடிக்கொண்டே இருக்கும் போதே முட்டை மற்றும் அழுகிய தக்காளியால் அடித்தனர். துடைத்துவிட்டு வெளியேறும் போது அண்ணன் குண்டுக்கல் குணபாலன் வந்தார்.


கலக்கல்... நன்றி... (த ம ஓ 5 ) என்றார்.

“ஒன்னிய தாண் இவ்ளோ நாளா தேடிட்ருக்கேன் ” என விரட்டத் தொடங்கினேன். ஆனால் ஓடி மறைந்துவிட்டார்.


பின்பு பதிவர் கில்மாகுமார் வந்து “வாங்கண்ணே நம்ம தல இருக்கார் அவர்ட்ட பேசலாம்” என அழைத்துச் சென்றார். அங்கே,

ஆம் அவரே தான் குறுந்தாடியுடன் அல்டிமேட் ரைட்டர் நின்று கொண்டிருந்தார். “அண்ணே அடிச்சு ஜட்டிய கிழிச்சு வுட்டாங்கண்ணே” என்றேன். “அப்படியா நான் ஜட்டியே போடறதில்ல போட்டா CK தான்” என்றார். நானும் “அப்படியா நானும் CK தான்” என்றேன்.
“நான் சொன்னது CALVIN KLEIN” என்றார்.

அல்ட்டிமேட் ரைட்டருடன் நான் 


நான் “C.KARTHIKEYAN எங்க எதுத்த வீட்டுக்காரர்” என்றேன். அவரது ரியாக்‌ஷனைப் பார்க்கும் முன்னமே ஓட்டத்தை ஆரம்பித்தேன்.


Friday, June 1, 2012

ஜரஜம் ஜாடிஜம் ஜெட்லிசேகர்

நான் சிறுவயது முதலே ஓசியுணவு(ஓசி + உணவு) விரும்பி உண்ணும் எனது அத்தை பையனுக்கு திருமணம் என்பதால் மனைவி குழந்தைகளை ஏற்றிக்கொண்டு எனது டிரை சைக்கிளை “செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்” பாடலைப்பாடிக்கொண்டே மிதிக்கத்தொடங்கினேன் ஆனால் மதுராந்தகம் வந்ததும் சைக்கிள் செயின் கழன்று சொதப்பியதால். மனைவி நடு ரோட்டில் வைத்து செருப்பை வாயில் கவ்வக்குடுத்து அடித்தார் அதனால் நான் தனியே பஸ்ஸில் செல்ல முடிவெடுத்தேன்

கோயம்பேட்டுக்கு சென்றேன் வண்டி பார்க்கிங் கட்டணம் 10 ரூபாயிலிருந்து 20 ரூபாய் ஆக்கீருந்தனை வாசக நண்பர் பார்க்கிங் பால்பாண்டியை அழைத்து மொக்கை போட்டேன் சரி பார்க் பண்ணிக்கோங்க என்றார் சரி என டிரை சைக்கிளை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தேன்



டேய் நான் பால்பாண்டி இல்லடா உனக்கு பரலோகப்பாண்டிடா என கத்திக்கொண்டே விரட்டினார் உடனே அவரை அனானிகள் லிஸ்டில் சேர்த்து ஸ்பேம் செய்து விட்டேன். 





நான் எப்படி ஊருக்கு செல்வேனென்றால் கடலூர் செல்லவேண்டுமெறால் பாண்டி பேருந்தில் ஏறி அமர்ந்து கொள்வேன் அப்புரமாக டிக்கெட் கேட்கும்போது 
“அய்யய்யோ தெரியாமா ஏறிட்டேன் அடுத்த ஸ்டாப்ல எறங்கிக்கறேன் என மாறி மாறி ஊர் போய் செர்ந்து விடுவேன்


பின்பக்கம் ஏறுகையில் கண்டக்டர் சீட் தான் சாய்ஸ்(இதே வாய் சில நாட்களுக்கு முன்பு டிரைவர் பக்கத்துலதான் ஒக்காந்து வருவேன்னு சொல்லுச்சேன்னு நீங்க கேக்கக்கூடாது ஏன்னா அது வேற வாய்) கண்டக்டரிடம் நீங்க இங்க உக்காருவிங்களான்னு கேட்டேன் அவரு ஆமா என்றார் உடனே அதை முகப்புத்தகத்தில் ஸ்டேட்டஸாக போட்டுவிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். ஸீட் கிடைத்தது கடைஸியில் பேருந்தில் என்னையும் சேர்த்து மொத்தமே 5 பேர் தான் 

கடனே எழவே என அந்த சீட்டில் அமர்ந்தேன். பின்பக்கம் ஒரு அழகான இளம் பெண் வந்து உக்கார்ந்தாள். அவளை வழக்கம்போல பார்வையாலே கற்ப்பழிக்கத்தொடங்கினேன்... அவள் வீடியோகேம் ஜாய்ஸ்டிக்கை நோண்டுவது போல மொபைலை நோண்டிக்கொன்டிறுந்தாள்... உடனே நானும் எனது ஜாய்ஸ்டிக்கை நோண்டத்தொடங்கினேன்

பேருந்து கிளம்பியது புதுப்பேருந்து என்பதால் ஆட்டம் இல்லை உடனே நான் என்னுடைய மொபைலில் மெல்லிதாக ஆட்டமா தேரோட்டமா பாடலைப்போட்டு ஆடத்தொடங்கினேன்... கண்டக்டர் மற்றும் கல்லூரி மாண்வி இனைந்து கொலைவெறித்தாக்குதல் நடத்தினர்



நடனத்தின் போது


கண்டக்டரிடம் 55 ரூபாய் கொடுத்தேன் க்ண்டக்டர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் ஏண்டா இந்த செல்லாத நோட்ட எத்தனவாட்டிடா மாத்த முயற்ச்சி பண்னுவ 93 ரூபா குடுடா என்றார்... ஹி ஹி மறந்துட்டேன் அண்ணே மம்மி டிக்கெட் ஏத்தினத அதான் உங்கட்ட பல்ப் வாங்குனேன் என்றேன்

மொதல்ல டிக்கெட்ட வாங்குடா அப்புரமா மிச்சமெல்லாம் வாங்கலாம் என எட்டி உதைத்தார்..... கீச் ஒலியெழுப்பி அவருக்கு கிலியை ஏற்ப்படுத்தினேன்

திண்டிவனம் திண்டிவனம் என சத்தம் கேட்டது உடனே அங்கிருந்த பெட்டிக்கடைக்காரரிடம் பிஸ்ஸா இருக்கிறதா எனக்கேட்டேன் வாழ்வில் முதல் முறையாக அன்று கக்கூஸ் விளக்குமாற்றால் அடி கிடைத்தது
பின்பு கண்டக்டரிடம்  திண்டி ”வனம்” என்று பொய்யா சொல்கிறாய் எல்லாமே கடையா இருக்கிறது என்றேன் அவரது தோல்பை கிழிய கிழிய அடித்தார் உடனே அண்ணே சும்மா ஜோக்குன்னே ஹி ஹி என்றேன் அடியிலிருந்து விடை கிடைத்தது



அப்போது ஒருவர் என்னிடம் வந்து தம்பி கோவிசிக்குறாதீங்க எனக்கு சர்க்கரை இங்க இருந்து உச்சா பொய்க்க்லாமா என்றார்





அப்படியா எனக்கு சர்க்கரை கம்மி தான் அப்போ நான் கக்.. போய்க்கலாமா என காமெடியை அவிழ்த்து விட்டேன்.. காறித்துப்பினார்

அப்புரம் அவர் தள்ளாடியபடி ஜிப்பை அவிழ்த்துக்கொண்டிருந்தார் 

“நான் வேணா பிடிச்சிக்கவா” என்று திருட்டுப்பார்வை பார்த்தேன்

அவர் “தா...இப்போ ஒருத்தனுக்கு வாய் வெத்தலபாக்கு போடப்போகுது” என்றார்...  அமைதியானேன்

அடுத்து எனக்கும் அவசரமாக வர படிக்கட்டில் நின்று வேலையை ஆரம்பித்தேன் பின்னால் வந்த டாட்டா சுமோ ப்ரைட்டில் வந்தது அது என்னை நோக்கி ஒளிக்கற்றைகளி வீசியதும் ஃபுயூஸ் ஆனது..... றோஃபெல்(ROFL) 

அடுத்து அந்த பெண்ணிடம் மெயில் ஐடி வாங்கி போலி பெயரில் ஆபாச சாட்டிங்கில் இறங்கினேன் வினவு கும்பல் கையில் ஸ்க்ரீன்ஷாட் கிடத்திருக்கிறது விரைவில் பதிவாக வரும் 


ஜெட்லி சேகர்




Tuesday, February 14, 2012

சன் டிவி பெண் ஊழியர் மர்ம மரணம்: கிழிந்த முகத்திரைகள்

எனது சொந்த ஊரான சென்னிமலையில் ஊரின் சென்டரான இடமான வண்டிப்பேட்டை பஸ் ஸ்டாப்பில் குமரன் சிலை எதிரே கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக ஆறுமுகம் கடை என்றால் ஊரில் தெரியாத ஆள் இல்லை. அந்தளவு ஃபேமஸ். அங்கு தான் நான் ஓசியில் டீ குடித்து வருகிறேன். ஒரு நாள் ஓசியில் டீ குடித்த பொது மூஞ்சியில் கழனித் தண்ணியை ஊத்தி காசு கேட்டனர்.. அன்றே அவர்களை அவமானப்படுத்துவது என முடிவு செய்தேன்.

டீக்கடை ஓனருடைய மகன் ராஜநாகம். இவரது மகள் பல்லிமூக்கி (சூப்பர் பிகர்). இவர் எம் எஸ் சி விசுவல் கம்யூனிகேஷன் (VISHAL KAMUNIKESAN) படித்து சென்னையில் பன் டீவி யில் நிருபராக வேலை பார்த்து வந்தார். 19.2.2011 சனி அன்று இவர் ரயிலில் அடிபட்டு மரணம் அடைந்ததாக 18.2.2011 தேதி இட்ட தினத்தந்தி நாளிதழில் படித்து அதிர்ச்சி அடைந்தேன்.


உடனே அதை வைத்து ஒரு கேள்வி பதில் கதை தயார் செய்தேன். என்னுடைய மொக்கையான சந்தேகங்கள்.. 

1. இவ்வளவு அழகான பிகராக இருந்தும் இவருக்கு காதலர் இருக்கிறாரா இல்லையா என போலீசார் விசாரிக்காதது  ஏன்?

2. இவர்களது டீக்கடையில் வாடிக்கையாக டீ குடிக்கும் யாரிடமும் இதுவரை விசாரித்ததாக தெரியவில்லை.. 

3. மகள் மரணமடைந்த அன்றே கடை அடைக்கப்பட்ட மர்மம் என்ன (நாங்க எல்லாம் எப்படி டீ குடிக்கரதாம் ஹீ ஹீ ஹீ )

4. ரயிலில் அடிபட்டதும் அவர் என்ன சொல்லி கத்தினார் என FIR-ல்  பதிவு செய்யவில்லையே ஏன் ?

5. அவர் 30000 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.,  இருந்தும் அவரது தந்தை டீக்கடை நடத்துவதன் மர்மம் என்ன? (என்னிடம் காசும் கேட்கிறார்)


இந்த மொக்கையான சந்தேகங்களுக்கு பின்னர் அந்தக் கடை பக்கமே செல்ல முடியாமல் போய் விட்டது. பின்பு அந்த பெண்ணின் தந்தை என்னை அழைத்து இதுவரை நீ குடித்த அத்தனை டீயும் இலவசம் என்னும் கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டார்..... உடனே நான் அடுத்த கட்டுக்கதையை அவரது கடையில் ஓசி டீ குடித்துக்கொண்டே யோசிக்க தொடங்கினேன். அப்போது...

நான்: "என்னண்ணே டீயில சூடு இல்ல

டீ மாஸ்டர்: நாயே.. அது டீ க்ளாஸ் கழுவுன தண்ணிடா!!!!

என்று அவமானப்படுத்தினார். உடனே மறுபடியும் கட்டுக் கதைகளை யோசிக்க ஆரம்பித்தேன். ஓசி டீயும் கிடைக்க வேண்டும்.. அதே நேரம் அவனை அவமானப்படுத்தவும் வேண்டும்.. எப்படி?? கட்டுக்கதைகள் கீழே:

 அந்தப் பெண்ணுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். தினமும் மொக்கை என்று கூகிளில் டைப் செய்து படித்து வந்துள்ளார். ஒருநாள் திடீரென என்னுடைய தளத்திற்கு வந்து படிக்கத் தொடங்கி இருக்கிறார். அவ்ளோதான் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதன்மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்:

1. பையனோ, பெண்ணோ வெளியூரில் படிக்க வைப்பதை முடிந்த வரை தவிர்க்கலாம்.. தனிமை பல தவறுகளை(என்னுடைய தளம் படிப்பது போன்ற ) செய்யத்தூண்டுகிறது.. 

2. மொக்கை என்பது நான் மட்டும் போடுவது அல்ல.. அதைப் பலரும் செய்து வருகின்றனர். ஆனாலும் தளத்தை வாசித்து விட்டு சாகும் முன் இன்டர்நெட் ஹிஸ்டரி டெலீட் செய்து விட்டு சாகவும். 

3.யாராவது தற்கொலை செய்தால் கூட அவர்களைப் பற்றி குடும்ப விவரத்துடன் இவ்வாறு ஒரு பதிவு தேத்த வேண்டும்.. 

டிஸ்கி : ஓர் பால் உறவு சரியானதா? தவறானதா? என்ற விவாதத்திற்கான தளம் இது அல்ல... எனவே கமெண்ட் போடுபவர்கள் அந்தக் கோணத்தில் கருத்து சொல்வதை தவிர்க்கவும்.. ஒரு பெண்ணுக்குத் தந்தை என்ற கோணத்தில் சிந்தித்து கமெண்ட் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... பெண்ணுக்குத் தந்தை இல்லாதவர்கள் பெரியப்பா, சித்தப்பா, மாமா என்ற கோணத்தில் சிந்தித்தும் கமெண்ட் போடலாம்.

Indli