எனது மச்சினிச்சியின் திருமணத்திற்கு அலுவலகப் பணிகள்(!) காரணமாக போகமுடியவில்லை அதனால் நானும் எனது மனைவியும் வார இறுதியில் அவள் கணவனின் ஊரான கொச்சிக்கு செல்வதாக முடிவெடுத்தோம்.
மனைவியைக் காலையில் எழுப்பி விட்டதும் அவளுக்கு காப்பி போட்டு கொண்டு தரவேண்டும். ஞாபக மறதியில் காப்பியில் உப்பு போட்டுக் கொண்டு வந்து விட்டதால் மனைவி காப்பியை மூஞ்சியில் ஊத்தினார் துடைத்துப் போட்டு விட்டு காலை சமையலைக் கவனிக்கச் சென்றேன்.
நண்பர் தொழில் நுட்ப பதிவர்(!) "பாரத் மாதா கீ ஜே" ரவிக்குமார் அவர்கள் பஸ்ஸை நிறுத்தி விட்டதாக முகபுதகத்தில் போட்டிருந்தார். உடனே தனி ஆளாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று மறியலில் ஈடுபட்டுக் கடைகளை அடைக்க வேண்டுமென்று கலவரத்தில் ஈடு பட்டேன்.
சாலையோர வியாபாரிகள் அனைவரும் சாக்கடைக்குள் தள்ளி விட்டு அடித்தனர்.. பின்பு தான் தெரிந்தது அது கூகிள் பஸ் என்று.... அவ்வ்வ்வ் என ஓசை எழுப்பினேன் தெரு நாய் எனது டிக்கியை கடித்து வைத்தது.
சாலையோர வியாபாரிகள் அனைவரும் சாக்கடைக்குள் தள்ளி விட்டு அடித்தனர்.. பின்பு தான் தெரிந்தது அது கூகிள் பஸ் என்று.... அவ்வ்வ்வ் என ஓசை எழுப்பினேன் தெரு நாய் எனது டிக்கியை கடித்து வைத்தது.
சரி என்று வீட்டிற்குச் சென்றதும் மனைவி "இவ்ளோ நேரமா எங்க பொருக்க போன?" என்று சொல்லி அடித்தார்.
கையில் 100 ரூபாயைக் கொடுத்து மச்சினியைப் பார்க்கப் போவதால் ஏதாவது பழம் வாங்கிவர சொன்னார் பார்சலுடன் வீடு திரும்பினேன்.... மச்சினியைப் பார்க்க போகும் ஆவலுடன் பயணத்தை தொடங்கினேன்.... மனைவி ஸ்லீப்பர் கிளாசில் ஏறிக்கொண்டார் நான் வழக்கம் போல வித் அவுட்டில் பயணத்தை தொடங்கினேன்.
கொச்சினில் வந்து இறங்கியதும் மனம் ரக்கை கட்டி பறந்தது. மச்சினியை பார்க்க போகும் ஆவலில் ஒரு மலையாள சேட்டனை இடித்து விட்டேன் கழுவி ஊத்தினான். பின்பு அவனிடம் சென்று போதி தர்மரின் அருமை பெருமைகளை பற்றி சொன்னதும் ஆனந்த கண்ணீர் விட்டு முல்லை பெரியாறு அணை குறித்து சாண்டியிடம் பேசுவதாக சொன்னார்(அவருக்கு என் நன்றிகள்).
பின்பு அவரிடம் பாபிலோனா வீடு எங்கே என்று மெதுவாக கேட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த கப்பை கிழங்கால் எறிந்தார் அதை பிடித்து சாப்பிட்டுக்கொண்டே மச்சினி வீட்டை நோக்கி நகர்ந்தேன்..
வீட்டிற்குச் சென்றதும் மச்சினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் மனைவி கண்ணைக் குத்திக் காயம் செய்துவிட்டார். அப்புறமாக வாங்கி வந்த பழங்களை எடுத்து கொடுக்க தொடங்கினேன். ஆனால் ரெண்டு கிலோ பழம் குடுங்க என்று கேட்டதும் தக்காளி பழத்தை கொடுத்து விட்டான் கடைக்காரன். மனைவி மச்சினி மாமியார் மூவரும் சேர்ந்து தக்காளிகளாலே அடித்து துரத்தினர்..
அப்புறம் மனது கேட்காமல் எதாவது கேக் வாங்கிச் செல்லலாம் எனக் கடைக்கு சென்று ஒரு கேக் வாங்கினேன் மீண்டும் வீட்டுக்கு சென்று கேக் பார்சலை பிரித்தேன். அதைப் பார்த்ததும் அனைவரும் காரித் துப்பினர். ஆனாலும் வற்புறுத்தலின் பேரில் அதை வெட்டி சாப்பிட தொடங்கினர். அப்போது மச்சினியின் கன்னத்தில் கேக் ஒட்டிக் கொண்டதால் அதை ஆர்வக்கோளாரில் துடைக்க சென்றேன் மனைவி பத்ரகாளியாக மாறி வீட்டை விட்டுத் துரத்தினார்.
நான் வாங்கி வந்த கேக்
நான் வாங்கி வந்த கேக்
வீட்டை விட்டு வெளியே வரும் பொது அவள் காதுக்கு கேட்காதமாதிரி "நான் ஆம்பளடி" கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன் என சொல்லிவிட்டு தலை தெறிக்க ஓடினேன்..
வழியில் ஒருவர் மீது மோதினேன். ஏன் இந்த அவசரம் என தமிழில் கேட்டார்.. நான் எனது மச்சினியின் மீது கொண்டிருந்த காதல் முதல் சற்று முன்பு அவளது கன்னத்தில் கை வைத்தது வரை அனைத்தையும் சொன்னேன். ஆனால் அவரோ என்னை மூர்க்கத்தனமாகத் தாக்க தொடங்கினார். அப்புறம் தான் தெரிந்தது அவர் தான் மச்சினியின் கணவனாம் மறுபடியும் ஓட்டக்காட்சி ஆரம்பமானது..
சகலயிடம் அடி வாங்கும் ஒரு அழகிய தருணம்
சகலயிடம் அடி வாங்கும் ஒரு அழகிய தருணம்
களைப்பில் ஒரு மலையாளி வீட்டிருக்குச் சென்று தண்ணி கேட்டேன் தண்ணி தருவாரோ மாட்டாரோ என்ற தயக்கத்தில் இருந்தபோது நன்றாக சுட வைக்கப்பட்ட சீரகதண்ணியை குடுத்தார்.
ஓமனகுட்டன் சேட்டன் மனைவி என் மனைவியுடன்
ஓமனகுட்டன் சேட்டன் மனைவி என் மனைவியுடன்
அவரிடம் தமிழ்தான் மலையாளத்தின் மூலம் என்றும் தமிழின் தழுவலே மலையாளம் என்றும் சென்னேன். அவரும் ஆமோதித்தார் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது மனைவியை நான் தழுவ தொடங்கினேன் அதற்கு தமிழின் தழுவல் தானே மலையாளம் என நீயே ஒத்துக்கொண்டு இப்போது என்ன? என்று சட்டம் பேசினேன் முல்லைபெரியாறு அணையில் என்னைக் கட்டி வைத்துவிட்டு அணையை திறந்து விட்டனர்.
சாம் ஆண்டர்சன்
சாம் ஆண்டர்சன்






