Showing posts with label travel. Show all posts
Showing posts with label travel. Show all posts

Thursday, December 22, 2011

மச்சினி,மலையாளி,முல்லைபெரியார்........


எனது மச்சினிச்சியின் திருமணத்திற்கு அலுவலகப் பணிகள்(!) காரணமாக போகமுடியவில்லை அதனால் நானும் எனது மனைவியும் வார இறுதியில் அவள் கணவனின் ஊரான கொச்சிக்கு செல்வதாக முடிவெடுத்தோம்.

மனைவியைக் காலையில் எழுப்பி விட்டதும் அவளுக்கு காப்பி போட்டு கொண்டு தரவேண்டும். ஞாபக மறதியில் காப்பியில் உப்பு போட்டுக் கொண்டு வந்து விட்டதால் மனைவி காப்பியை மூஞ்சியில் ஊத்தினார் துடைத்துப் போட்டு விட்டு காலை சமையலைக் கவனிக்கச் சென்றேன்.

நண்பர் தொழில் நுட்ப பதிவர்(!) "பாரத் மாதா கீ ஜே" ரவிக்குமார் அவர்கள் பஸ்ஸை நிறுத்தி விட்டதாக முகபுதகத்தில் போட்டிருந்தார். உடனே தனி ஆளாக கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று மறியலில் ஈடுபட்டுக் கடைகளை அடைக்க வேண்டுமென்று கலவரத்தில் ஈடு பட்டேன்.


சாலையோர வியாபாரிகள் அனைவரும் சாக்கடைக்குள் தள்ளி விட்டு அடித்தனர்.. பின்பு தான் தெரிந்தது அது கூகிள் பஸ் என்று.... அவ்வ்வ்வ் என ஓசை எழுப்பினேன் தெரு நாய் எனது டிக்கியை கடித்து வைத்தது.



சரி என்று வீட்டிற்குச் சென்றதும் மனைவி  "இவ்ளோ நேரமா எங்க பொருக்க போன?" என்று சொல்லி அடித்தார்.

கையில் 100 ரூபாயைக் கொடுத்து மச்சினியைப் பார்க்கப் போவதால் ஏதாவது பழம் வாங்கிவர சொன்னார் பார்சலுடன் வீடு திரும்பினேன்.... மச்சினியைப் பார்க்க போகும் ஆவலுடன் பயணத்தை தொடங்கினேன்.... மனைவி ஸ்லீப்பர் கிளாசில் ஏறிக்கொண்டார் நான் வழக்கம் போல வித் அவுட்டில் பயணத்தை தொடங்கினேன்.

கொச்சினில் வந்து இறங்கியதும் மனம் ரக்கை கட்டி பறந்தது. மச்சினியை பார்க்க போகும் ஆவலில் ஒரு மலையாள சேட்டனை இடித்து விட்டேன் கழுவி ஊத்தினான். பின்பு அவனிடம் சென்று போதி தர்மரின் அருமை பெருமைகளை பற்றி சொன்னதும் ஆனந்த கண்ணீர் விட்டு முல்லை பெரியாறு அணை குறித்து சாண்டியிடம் பேசுவதாக சொன்னார்(அவருக்கு என் நன்றிகள்).


பின்பு அவரிடம் பாபிலோனா வீடு எங்கே என்று மெதுவாக கேட்டேன். சாப்பிட்டுக் கொண்டிருந்த கப்பை கிழங்கால் எறிந்தார் அதை பிடித்து சாப்பிட்டுக்கொண்டே மச்சினி வீட்டை நோக்கி நகர்ந்தேன்..

வீட்டிற்குச் சென்றதும் மச்சினியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன் மனைவி கண்ணைக் குத்திக் காயம் செய்துவிட்டார். அப்புறமாக வாங்கி வந்த பழங்களை எடுத்து கொடுக்க தொடங்கினேன். ஆனால் ரெண்டு கிலோ பழம் குடுங்க என்று கேட்டதும் தக்காளி பழத்தை கொடுத்து விட்டான் கடைக்காரன். மனைவி மச்சினி மாமியார் மூவரும் சேர்ந்து தக்காளிகளாலே அடித்து துரத்தினர்..

அப்புறம் மனது கேட்காமல் எதாவது கேக் வாங்கிச் செல்லலாம் எனக் கடைக்கு சென்று ஒரு கேக் வாங்கினேன் மீண்டும் வீட்டுக்கு சென்று கேக் பார்சலை பிரித்தேன். அதைப் பார்த்ததும் அனைவரும் காரித் துப்பினர். ஆனாலும் வற்புறுத்தலின் பேரில் அதை வெட்டி சாப்பிட தொடங்கினர். அப்போது மச்சினியின் கன்னத்தில் கேக் ஒட்டிக் கொண்டதால் அதை ஆர்வக்கோளாரில் துடைக்க சென்றேன் மனைவி பத்ரகாளியாக மாறி வீட்டை விட்டுத் துரத்தினார்.


                        நான் வாங்கி வந்த கேக் 

வீட்டை விட்டு வெளியே வரும் பொது அவள் காதுக்கு கேட்காதமாதிரி "நான் ஆம்பளடி" கொஞ்சம் அப்படி இப்படிதான் இருப்பேன் என சொல்லிவிட்டு தலை தெறிக்க ஓடினேன்..

வழியில் ஒருவர் மீது மோதினேன். ஏன் இந்த அவசரம் என தமிழில் கேட்டார்.. நான் எனது மச்சினியின் மீது கொண்டிருந்த காதல் முதல் சற்று முன்பு அவளது கன்னத்தில் கை வைத்தது வரை அனைத்தையும் சொன்னேன். ஆனால் அவரோ என்னை மூர்க்கத்தனமாகத் தாக்க தொடங்கினார். அப்புறம் தான் தெரிந்தது அவர் தான் மச்சினியின் கணவனாம் மறுபடியும் ஓட்டக்காட்சி ஆரம்பமானது..


                   சகலயிடம் அடி வாங்கும் ஒரு அழகிய தருணம் 

களைப்பில் ஒரு மலையாளி வீட்டிருக்குச் சென்று தண்ணி கேட்டேன் தண்ணி தருவாரோ மாட்டாரோ என்ற தயக்கத்தில் இருந்தபோது நன்றாக சுட வைக்கப்பட்ட சீரகதண்ணியை குடுத்தார்.

                  ஓமனகுட்டன் சேட்டன் மனைவி என் மனைவியுடன் 

அவரிடம் தமிழ்தான் மலையாளத்தின் மூலம் என்றும் தமிழின் தழுவலே மலையாளம் என்றும் சென்னேன். அவரும் ஆமோதித்தார் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது மனைவியை நான் தழுவ தொடங்கினேன் அதற்கு தமிழின் தழுவல் தானே மலையாளம் என நீயே ஒத்துக்கொண்டு இப்போது என்ன? என்று சட்டம் பேசினேன் முல்லைபெரியாறு அணையில் என்னைக் கட்டி வைத்துவிட்டு அணையை திறந்து விட்டனர்.


                               சாம் ஆண்டர்சன் 


Wednesday, November 2, 2011

இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியா....

ஓசூரில் இருந்து பெங்களுருக்கு சேலம் கோட்ட அரசு பேருந்தில் நான் (வழக்கம் போல ஓசியில்) பயணம் செய்தேன்.. அப்போது பேருந்து வெகு நேரம் டிக்கெட் ஏற்றிக்கொண்டு இருந்தது.. டிரைவர் வண்டியை அரக்கி அரக்கி நகர்த்திக்கொண்டு இருந்தார்... டிக்கட் வாங்கிக்கொண்டு பேருந்தில் உட்கார்ந்திருந்தவர்களை பார்க்கும் பொது எனக்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது 




சரி போனால் போகின்றது என்று அமைதியாக இருந்தால் பைபாஸ் பாலங்களை தவிர்த்து கர்நாடக எல்லையில் இருக்கும் சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் (ஏதாவது பிட்டு பட தலைப்பாக இருக்குமோ?)என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கொண்டு இருந்தார்...

நான்  பேருந்தில் கண்டக்டர் உட்காரும் முன் சீட்டில்  உட்கார்ந்து கொண்டேன்..டிரைவர் ஹான்சை வாயில் அடக்கி கொண்டு சாது போல அமைதி காத்த படி பேருந்தை ஓட்டினார்...டிக்கெட் போட்டு ஸ்டெஜ் குளோஸ் செய்து விட்டு மேல் வந்து கண்டக்டர் தனது இருக்கையை கேட்டார். சட்டம்  பேசினேன் அடித்து துவைத்து துரத்தி விட்டனர்.... இருந்தும் பஸ்ஸில் 45 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்டிகள் இருந்ததால் நான் என்ஜீன் மீது அமர்ந்து கண்டக்டரிடம் பேச்சு கொடுத்தேன்...


ஏன் இத்தனை ஸ்டாப்பில் நிறுத்தி செல்லுகின்றீர்கள் என்று கேட்டதுதான் தாமதம்.. மடை திறந்த அணையில் இருந்து சீறிப்பாயும் நீரை போல அந்த டிரைவரும் கண்டக்டரும் சேர்ந்து என்னை அடி பிரட்டி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்த டிரைவர் போட்டிருந்த மாவாவை துப்பி அடித்தார்...

ஏன்டா காசு குடுத்து டிக்கெட் எடுதவங்களே பொத்திக்கிட்டு வராங்க  ஓசில  வர்றவன்  உனக்கு என்னடா பெரிய காரணம் சொல்லனும்னு  அடி அடின்னு அடிச்சுட்டாங்க 

நான் சொன்னேன் :நாங்களும் மனுங்கதான் சார்.. வேனும்னேவா டிக்கெட் எடுக்காம வர்றோம் ...?? என்ன செய்ய???  சில பொறம் போக்குங்க படிச்ச திமிர்ல எங்களை வாட்டி எடுக்கறானுங்க..?? சார் டிக்கெட் சார் டிச்கேட்ன்னு  கேட்டு வாங்கிடராணுக.
அவனுக டிக்கெட் எடுக்கரதுனால எங்களுக்கு கெட்டபேர்.....  

சார் நாளும் கிழமைன்னா பராவாயில்லை இல்லை விடுமுறை நாள் என்றால் கூட டிக்கெட் வாங்க சொன்னா எப்படி  ... கூட்டம் அலை மோதும் அன்னிக்கு பிரச்சனை இல்லை.. ஆனா சாதாரண நாளில் டிக்கெட் எடுன்னு சொன்ன நாங்க என்னசார் செய்யறது..????

தனியார் பஸ் டிக்கெட் வாங்கறாங்கன்னு சொல்றாங்க .. ஏன் இருக்காது... இங்க மெயின்டெயின் செய்யவும் பேர் பார்ட்டஸ் மாத்திகொடுக்கவும் நாங்க டிக்கெட் எடுக்கணுமா...?



இவ்வளவு பேசியும் அவர்கள் என்னை ஒன்னும் சொல்லவில்லை நண்பன் வித்தவுட் வீராசாமி அவர்கள் எனக்கு ஆதரவாக பேசியது ஒரு காரணமாக இருக்கலாம்.(அவருக்கு என்ன நன்றிகள்)

அவர்கள் பொறுமையாக  இருந்தது எனக்கு பிடித்திருந்தது திடீரென  "இதுக்கு முன்ன ஊர்ல கட்டவண்டி ஓட்டினியான்னு" சொல்லிட்டு இறங்கி ஓடினோம் நானும் நண்பர் வித்தவுட் அவர்களும் .. ஆனால் துரதிர்ஷ்டம் விரட்டி பிடித்து விட்டனர் 20 வருஷம் ஓட்டி சர்விஸ் வச்சி இருக்கும் டிரைவர்கிட்டயாடா மோதுரன்னு .... குமுறி எடுத்து விட்டனர்....

நானும் நண்பரும் கதறி அழுதோம் பொதுமக்களுக்கு ரயில் எப்படியோ அப்படித்தான் பஸ்சும் .. ஆனா  எங்களை விட திருட்டு ரயில் பயணம்  செய்பவர்களுக்கு , எங்களை விட சிரமம் கம்மி.. ஆனா எங்களுக்கும் அவுங்களை விட சிரமம் அதிகம்.

டீ விலை இரண்டு ரூபா வித்த காலத்துல இருந்து நாங்க ஓசியில தான் டீ குடிக்கறோம் ..இன்னைக்கு அப்படியா டீ ஐந்து ரூபாய்க்கு விக்கறான்(அவன் எவ்வளவுக்கு  வித்தா எனக்கென்ன நமக்கு எப்பவுமே ஓசி டீ தான் ) என்று சம்மந்தம் இல்லாமல் பேசியபடியே பயணம் தொடர்ந்தது.... 


கடைசியாக பேருந்து நின்றதும் அதுக்குள்ளே சென்னை வந்துருச்சான்னு கேட்டது தான் மிச்சம் மொத்த பேருந்து நிலையமும் செருப்பால் அடிக்க தொடங்கிவிட்டனர்...... நண்பர் வித்தவுட் உட்பட அப்போ தான் கண்டக்டர்  சொன்னார் "ஏன்டா முக்கா மொட்டையா நான் அங்க இருந்து பைபாஸ் பாலங்களை தவிர்த்து சின்ன சின்ன ஊர்களில் எல்லாம் கூட  நிறுத்தி மெஜஸ்ட்டிக் மெஜஸ்ட்டிக் என்று தொண்டை தண்ணி வற்றுவது போல கத்திக்கிட்டு இருக்கேன் இங்க வந்து சென்னைனா கேக்குற? என்றார்.....




இப்ப்போ சொல்லுங்க நண்பர்களே நான் செஞ்சது தப்பா????????????


டிஸ்கி: இன்னும் ஒரு வாரம் மெஜஸ்ட்டிக் பேருந்துநிலையம் அருகில் உள்ள சிட்டுகுருவி லாட்ஜ்  அறை எண் 318  வாசலில் தங்கி இருப்பேன் சந்திக்க விருப்பமிருப்பவர்கள் ட்வீட்டவும்.....    

நன்றிகளுடன் 
சாம் 

Indli