ஆல்பம்.
தமிழக அரசு தமிழ்ப்பதிவர்களுக்கு விருதுகளை அறிவித்து இருக்கின்றது...ஔவையார் விருதைப் பெற்று இருப்பவர் யார் தெரியுமா?
ஔவை பிராட்டி போல அனுதினமும் தமிழ்த் தொண்டு செய்யும் திரு.ஜெட்லிசேகருக்கு கொடுத்து இருக்கின்றார்கள்..இனி தமிழ் மெல்ல வாழும்... வாழ்த்துகள்.. ஔவையார் விருது பெற்ற திரு ஜெட்லி சேகருக்கு.==============================
பெப்சி சங்கத்தை உடைத்தே தீருவோம் என்று தயாரிப்பாளர் சங்கத்தினர் ஒற்றைக்காலில் நிற்கின்றார்கள்.. நானும் வெயில் காலத்தில் பெப்சி சங்கத்தை உடைப்பது நியாயமல்ல என உதயகுமார் தலைமையில் கடும் போராட்டத்தில் இறங்கினேன். உடனே என்னையும் தலைவர் உதயகுமாரையும் இரண்டு நாள் கட்டி வைத்து அடித்தனர் .. இப்போது ஸ்டிரைக் வாபஸ் பெற்றுவிட்டார்கள்..பார்ப்போம் பொறுத்து இருந்து பார்ப்போம். என்ன நடக்கின்றது என்று..கூறிக்கொண்டே வடை பெற்றோம்....சாரி விடை பெற்றோம்.
பின்பு அது சரியான விடையா என ஒரு டீச்சரிடம் கேட்டேன். டிக்கி பிளக்க பிளக்க பிரம்பால் அடித்து துரத்தினர்..
=====================================
பதிவர் விந்தை மனிதன் கூஜாராம் திருமணத்துக்கு என்னால் போக முடியவில்லை.. சரியாக அதே நாளில் எனது அந்தை பையன் (விந்தை,அந்தை) ஆந்தை திருமண நிச்சயதார்த்தம் கடலூரில் நடந்த காரணத்தால் என்னால் அதில் கலந்து கொள்ள முடியவில்லை. திருமணத்தில் காளான் பிரியாணி போட்டோம் நீதான் மிஸ் பண்ணி விட்டே என்று என்னை வெறுப்பேத்த கூஜாராம் கேட்ட போது பதில் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு இருக்கின்றதே... அவை கொடுமையான கணங்கள்.
==========================================
மிக்சர்
ஐபிஎல் சென்னையில் நேற்று கோலாகலமாக தொடங்கி விட்டது.. பத்தாவது படிக்கும் பசங்களின் பெற்றோர்கள் வெறுத்து போய் இருக்கின்றார்கள்.. பத்தாவது படிக்கும் ஆம்பளை பசங்க இஞ்சி தின்ன குரங்கு(ஜெட்லி சேகர்) கணக்கா முகத்தை வச்சிகிட்டு புத்தகத்தை வச்சிகிட்டு படிக்கறது போல நடிக்கறானுங்க. இந்த விஷயத்தை என்னுடைய பக்கத்து வீட்டுப் பத்தாவது மாணவன் பட்பனாதன் அம்மாவிடம் போட்டு கொடுத்தேன்.. அன்றைய பொழுது சந்தோசமாக சென்றது.
==========================================
ஏண்டா சும்மாவே வீட்டுல இருக்க எதுனாச்சும் வேலைக்கு போலாம்ல என்று மாமியார் காலையில் விளக்குமாற்றால் அடித்து வீட்டைவிட்டு விரட்டினார் .
மெட்ரோரயில் பணிகள் காரணமாக சென்னை அசோக்பில்லரில் இருந்து கோயம்பேடு செல்வதற்குள் போதும் போது என்றாகிவிடுகின்றது...என்னைக்குத்தான் இந்த மெட்ரோரயில்பணிகள் முடியும் என்று ஏக்கமாகவும் கடுப்பாகவும் இருக்கின்றது என்று வீட்டு வாசலில் நின்று மாமியாரிடம் கூறினேன்.. மறுபடியும் என்னை அடித்து துவைத்தார்.
மிருகவதை சட்டத்தில் அவரை சிறையில் அடைதிருக்கின்றனர் (முதல்வர் மம்மிக்கு எனது வாழ்த்துக்கள்)
==============================
Still laughing man. Super
ReplyDeleteஎன்னா ஒரு நக்கல்,தாங்கல்ல:-))))
ReplyDeleteஅங்க போஸ்ட் வந்தா இங்க வந்து சிரிக்கலாம் போல;-)
:)))
ReplyDelete